Sunday, November 13, 2016

81 - துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

திருவயினந்தபுரத்தில் வில்லிபுத்தூர் பகவர் என்பவர் வசித்து வந்தார்

அவர் தினசரி குளிக்கச் செல்லும் போது, எப்போதும் மற்றவர்கள் குளிக்கும் துறையை விட்டுவிட்டு வேறு துறைக்குச் சென்று குளிப்பார்

ஒருமுறை அந்தணர்கள் அவரிடம், நீங்கள் ஏன் நாங்கள் குளிக்கும்துறையிலேயே குளிப்பதில்லை?" என்று கேட்டனர்..

அதற்கு   பகவர் சொன்னார், "நான் வைஷ்ணவன்.ராமானுஜரைப் பின்பற்றுபவன்.நாங்கள் நித்ய அனுஷ்டானத்தை ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்கிறோம்.ஆனால், நீங்கள் வர்ணாஸ்ரமத்தைப் பின் பற்றுபவர்கள்.இவை இரண்டும் ஒன்று சேராது.ஆகவேதான் நான் வேறு துறை செல்கிறேன்" என்றார்

(பகவர், ஒரு அந்தணரோ அல்லது சந்நியாசியோ அல்ல என்பதை நினைவில் கொள்க)

நான் அந்த பகவரைப்போல வைணவ நம்பிக்கையில் வேறு துறை செய்தேனோ (சென்றேனோ) இல்லையே..ஆகவே நான் இங்கு இருந்தால் என்ன வேரு ஊருக்குச் சென்றால் என்ன என் கிராள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment