Friday, September 30, 2016

அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரைப் போல

அக்ரூரர், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரர்.ஆனாலும் அவர் பணியாற்றியது கம்சனின் அரண்மனையில்.ஆனாலும், அவரது சிந்தனை எப்போதும் கிருஷ்ணனைப் பற்றியே!

கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் ஒரு திட்டம் தீட்டினான்.புதிதாக தனுர் யாகம் ஒன்றை நடத்தி, அதற்கு கிருஷ்ணரையும், ப்லராமனையும் அழைத்து வரச் செய்து, ஒரு மல்யுத்தத்தில் அவர்களைக் கொல்ல திர்மானிக்கிறான்.எனவே, வசுதேவரின் சகோதரர் ஆ ன அக்ரூரரை அனுப்பி இருவரையும் அழைத்து வரச் சொன்னான்.

அக்ருரருக்கு ஒரே சந்தோசம்.கண்ணனை நேரில் பார்க்கலாம் என.அந்த சந்தோஷத்தில், கம்சன், கண்ணனைக் கொல்லவே அழைத்து வரச் சொல்கிறான் என்பதை மறந்து விட்டார்.

மனதில் கிருஷ்ணனை சந்திக்கப் போகும் நிகழ்ச்சியை அசை போட்டவாறே யமுனை நதிக்கரையில் இருந்த பிருந்தாவனத்திற்கு செல்கிறார்.அங்கு கண்ணனைக் கண்டு பேசினார்.அவரை அழைத்துச் செல்ல வந்ததாகக் கூறினார்.  கண்ணனும், கம்சனின் ராஜ்ஜியத்திற்குள் செல்லும் நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆகவே மறுப்பு ஏதும் சொல்லாது பலராமனுடன் கிருஷ்ணனும் கிளம்பினார்
.

இப்போதும் நந்தகௌன் என்னும் இடத்திலிருந்து கண்ணனை அக்ரூரர் தேரில் அழைத்துச் சென்ற வழித்தடம் உள்ளது

அப்படிப்பட்ட அக்ரூரரைப் போல கண்ணனை அழைத்துவரப் போனவளா நான்? என்று கேட்டாள் அப்பெண்

No comments:

Post a Comment