Saturday, October 1, 2016

அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல (2)

பாண்டவர்களின் தூதுவனாக துவாரகையிலிருந்து கண்ணன் தன் தேரில் அஸ்தினாபுரம் வருகிறார்.

சபை மறுநாள்தான் கூடும்.அப்போதுதான் பேச்சை ஆரம்பிக்க முடியு.ஆகவே, அன்றிரவை யார் மாளிகையிலாவது கழிக்க வேண்டும்.ஒவ்வொருவரும், த்ங்களது மாளிகையில் கண்ணன் தங்க வேண்டும் என விரும்புகின்றனர்

அப்போது கண்ணனின் கண்ணில் தென்பட்ட ஒரு மாளிகையைப் பார்த்து கண்ணன்,"ஆஹா...இவ்வளவு பெரிதாக உள்ள மாளிகை யாருடையது?" என் கிறார்.

"கண்ணா, இது என் மாளிகை.நீ இங்கேயே தங்கலாம்" எங்கிறார் திருதிராஷ்டிரர்

கண்ணன் மறுத்து, அடுத்து ஒரு மாளிகையைப் பார்த்து'இது யார் மாளிகை?" என வினவ, பீஷ்மர், "கண்ணா, இது என் மாளிகை.நீ இங்கேயே தங்கலாம்" என் கிறார்

கண்ணன் அதையும் மறுத்து, மேலே செல்ல,அடுத்து ஒரு மாளிகையிலிருந்துசங்கீத ஒலி, நடன மாதுக்களின் நடன ஓசை கேட்க, "இது யார் மாளிகை?" என் கிறார்

"கண்ணா, இது என் மாளிகை.உல்லாசமானது.நீ இங்கேயே தங்கலாம்" என் கிறான் துரியோதனன்.

கண்ணன் அதையும் நாசுக்காக மறுத்து, அடுத்து ஒரு குடிலுக்கு வருகிறார்

"மனதிற்கு சாந்தியை ஏற்படுத்தும் இக்குடில் யாருடையது?" என் கிறார்.

"கண்ணா, இது உன் மாளிகை.நீ இங்கு உன் விருப்பம் போல தங்கலாம்" என் கிறார் விதுரர்.

சிரித்த கண்ணன், "நான் இதுநாள் வரை அடியார்கள் மனதை குடிலாகக் கொண்டிருக்கிறேன்." என்றார்

அதற்கு விதுரர், "ஆம் கண்ணா! அதேதான்.என் அகம் தான் இந்த அகம்.என் அகத்தினுள் நீ ஏற்கனவே இருக்கின்றாய்.எனவே, இந்த அகத்திற்குள் குடியேற உனக்கு என்ன வேண்டும்?' என்றார்

உலகவழக்கப்படி, குடியிருப்பவர்தான் வாடகைக் கொடுக்க வேண்டும்.இதயம் என்ற வீட்டினுள் இறைவனை குடிவைத்தவன், குடியிருப்பவனுக்கு பூவோ, பழமோ கொடுத்தால் போதும்.அவர்கள் மனதில் குடியேறிவிடுவேன்' என்றவர் கிருஷ்ணர்

அதனால்தான் விதுரர் உன் அகம் என் அகம் என்றார் (அகம் என்றால் வீடு)

வடமொழியில் அகம் எனில் அகங்காரம்.இறைவன் மனதில் குடியேறின் இந்த அகம் ஒழிந்துவிடும்

அதனால் தான் "அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல..(இல்லையே) அதனால் வெளியே செல்கிறேன்" என் கிறாள் அப்பெண்.
 

No comments:

Post a Comment