Monday, November 14, 2016

44- பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போல

கிருஷ்ணரும், பலராமரும்..கம்சனைக் காண மதுரா வருவதற்கு முன் , ஒரு வண்ணானிடம் அணிந்து செல்ல துணியைக் கேட்க, அவன் கொடுக்க மறுக்கிறான்.பின், அவனைத் தோற்கடித்து, துணிகளை எடுத்து அணிந்து செல்கின்றனர்

பின் அவர்கள்..மணமுள்ள மலர்களை அணிய விரும்புகிறார்கள்.அதனால், ஒரு பூ வியாபாரியிடம் செல்கின்றனர்.அவன் இவர்கள் இருவரைப் பார்த்ததும் யாரென அறிந்து கொண்டான்.தன்னிடமிருந்த மணம் மிகுந்த மலர்களை அவர்களுக்கு கொடுக்கிறான் (அவனது பெயர் சுதாமன் என் கிறது பாகவதம்)

மலர்ந்த தாமரைப் போலக் காணப்பட்ட அவர்கள், மனம் மகிழ்ந்து அவன் கேட்ட வரங்களை அளிக்கின்றனர்

ஆழ்வார்களும், ஆச்சார்யாக்களும்  எம்பெருமானை மலர் வழிப்பாடு செய்ய இது காரண்மாக அமைந்தது எனலாம்

அப்படிப்பட்ட மாலாகாரர் (மாலைக்காரர்) போல எம்பெருமானுக்குப் பூவைக் கொடுத்தேனோ..(இல்லையே..ஆதலால் நான் இவ்வூரில் இருந்தால் என்ன..வெளியேறினால் என்ன) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

No comments:

Post a Comment