Saturday, November 5, 2016

72- உயிராயபெற்றேனோ ஊமையைப்போலே

ராமானுஜரின் மடத்தில் வாய் பேச முடியாத ஒருவர் இருந்தார்.தன்னால் முடிந்த சேவைகளை ராமானுஜருக்கு அவர் ஆற்றி வந்தார்

ஒருநாள், ராமானுஜர் அவரை ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றார்

அறையின் கதவை தாளிட்டப் பின்னர்,  பாதுகைகளை அவரது தலையில் வைத்து ஆசிர்வதித்தார்.பின், அந்தப் பாதுகைகளை அவரிடமே கொடுத்துவிட்டார்

இந்நிகழ்வுகளை கூரத்தாழ்வார், ஒரு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்

"நானும் ஏதும் அறியாதவனாய் , வாய் பேச முடியாதவனாய் இருந்திருந்தால் எனக்கு ராமானுஜரின் ஆசி இதுபோல கிடைத்திருக்குமே" என எண்ணினார்

அந்த, வாய் பேச முடியாதவர்,  ராமானுஜரையே தன் உயிராய் எண்ணி  பணிபுரிந்தவாறே தன் வாழ்நாளைக் கழித்தார்

(அவரைப்போல )உயிராயப் பெற்றேனோ ஊமையைப் போலே . இல்லையே என் கிறாள் ராமானுஜரிடமே  திருக்கோளூர்ப் பெண்

1 comment:

  1. ராமானுஜரையே தன் உயிராய் எண்ணி பணிபுரிந்தவாறே தன் வாழ்நாளைக் கழித்தார்...அது போல நாமம் பணிவோம்.. நாராயணாய

    ReplyDelete