Thursday, November 10, 2016

77 - நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே

நீரோருகம் என்றால் தாமரை மலராகும்

காசியில், சிங்கன் என்பவன் வசித்து வந்தான் .அவன் தீவிர ஸ்ரீநாரயணரின் பக்தன்.தினசரி கோயில் குளத்திலிருந்து தாமரை மலரைப் பறித்து வந்து எம்பெருமானை அலங்கரித்து வந்தான்

அவன் நல்ல நீச்சல் வீரன்.ஆகவே, அவனுக்கு அந்த அகந்தை இருந்தது.கங்கை ந்தியின் ஒரு கரையிலிருந்து அடுத்தக் கரைக்கு அநாசியமாக நீச்சல் அடிப்பான்.

ஒருசமயம், அவன் அவன் அப்படி நீச்சல் அடிக்கையில், நதியின் சுழலில் சிக்கிக் கொண்டான்.கங்கை அவனை அடித்துச் சென்றது.அவனது நீச்சல் திறமை எடுபடவில்லை.அவன் கொஞ்சம் கொஞ்சமாக முழுகத் தொடங்கினான்.

தனக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பதை அறிந்து வைத்திருந்த அவன், கஜேந்திரனின் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து காத்த நாராயணனின் நினைவு வர.."எம்பெருமானே..நான் உனக்கு சரணாகதி" என ஸ்ரீநாராயணனிடம் சரணாகதி அடைந்தான்,

ஆந்த சமயம் காற்று பலமாக விச..நதியில் ஒரு பெரிய அலை எழுந்தது.அது , அவனை கரையில் சேர்த்தது.

இறைவனின் அருள்தான் தன்னைக் காத்தது என அறிந்த அவன் அகந்தையை விட்டொழித்தான்.பின், எம்பெருமானுக்கு பணிவிடையே தன் பணி என மலர்களால் இறைவனை தினமும் அலங்காரம் செய்து  வாழ்ந்து வந்தான்

அப்படிப்பட்ட காசிசிங்கனைப் போல தினமும் தாமரை மலரை எம்பெருமானுக்கு இட்டேனா..இல்லையே..ஆகவே..நான் இங்கிருந்தால் என்ன , வெளியேறினால் என்ன என திருக்கோளூர் பெண் கூறினாள் 

2 comments:

  1. Great service. Thank you. Adiyen

    ReplyDelete
  2. நாங்களும் அகந்தையை விட்டு ஒழிப்போம்...

    ReplyDelete