Friday, November 4, 2016

69- கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே

மாறனேரி  மகான் ஆளவந்தாரின் சீடராக விளங்கியவர்.பெரிய நம்பிக்கு நெருக்கமானவர்

இவர் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்.ஒருநாள் அவர் மண்ணைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த பெரிய நம்பி அதைப் பற்றிக் கேட்டார்."மண்ணால் ஆன உடலுக்கு மண்ணை இடுகிறேன்' என சொன்னவர், அத்துடன் நிலலது கண்ணனும் மண்ணை உண்டதைச் சொன்னார்

ஆளவந்தார் ராஜபிளவைக் கட்டியினால் அவதிப்பட்டார்.மாறனேறி நபிகள், அதனைத் தான் வாங்கிக் கொண்டு ஆளவந்தாரைக் குணமடையச் செய்தார்.தமது நோயை வாங்கிக் கொண்ட நம்பிக்கு, பெரிய நம்பி பணிவிடைகள் செய்தார்.இப்படி, அவர்கள் சாதி பேதமின்றிப் பழகினர்

மாறனேறி நம்பி மறைந்து விட வேதியரான பெரிய நம்பி, அவருக்கு இறுதிக் கடன் களைச் செய்தார்.அதை விரும்பாத மற்ற வேதியர்கள்பெரிய நம்பியை விலக்கி வைத்தனர்.இது கண்ட அவரது மகள் கோபமுற்று திருவரங்கப் பெருமானிடம் நியாயம் கேட்கச் சென்றாள்.அப்போது, தேரில் உலா வந்து கொண்டிருந்த திருவரங்கனை நோக்கி' "எனது தந்தை மாறனேரி நம்பிக்கு இருதிக்கடன் செய்தது நியாயம் என்றால், உமது தேர் அசையாது நிற்கட்டும்" என்றாள் அந்துழாய் (பெரிய நம்பியின் மகள்)

தேர் அப்படியே நின்றது.அப்போது ராமானுஜர் அங்கு வந்தார்.பெரிய நம்பியின் செயலுக்கு விளக்கம் கேட்டார்
பெரிய நம்பிகள்"பறவை யினத்தைச் சேர்ந்த ஜடாயூவிற்கு ஸ்ரீராமன் இறுதிக் கடன் செய்ததையும்,விதுரருக்கு தர்மபுத்திரர் இறுதிக் கடன் செய்ததையும் கூறி மாறனேரி நம்பி இவர்களைவிட தாழ்ந்தவரா" என்றார்

ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அதனால்தான் மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்ததாகப் பெரிய நம்பி சான்றுகள் காட்டிப் பேசினார். மேற்கண்ட சான்றுகளை எடுத்துக்காட்டிப் பேசிய பெரிய நம்பிகள் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஒரு கருத்தைத் தெரிவித்தார். 
‘‘ராமர், தருமர் செய்த செயல்களை ஆழ்வாராதியர் குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்கள் கடலோசை போன்றவையா?’’ என்று வினவினார். அதாவது, கடலோசை ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது! அதனை எவர் பொருட்படுத்துகின்றனர்? முற்போக்குச் சிந்தனைகளையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் அவ்வப்போது தோன்றும் மகான்கள் சான்றோர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றனர். 

அவை வீணில் ஒலிக்கும் கடலோசையைப் போன்று அலட்சியம் செய்யப்படுகின்றனவே? என்று பெரிய நம்பி எடுத்துப் பேசினார்

. இதையே திருக்கோளூர்ப் பெண்பிள்ளை கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே?  என்றாள்

No comments:

Post a Comment