Friday, November 4, 2016

65- ஆரியனைப் பிரிந்தோனோ தெய்வவாரியாண்டானைப் போலே

ஆளவந்தார், திருவனந்தபுரம் புறப்பட்டு செல்வதற்கு முன்னால்தம் மடத்தின் பொறுப்பைதெய்வவாரியாண்டான் என்ற சீடரிடம் விட்டுச் சென்றார்.இந்த சீடர் குருபக்தி அதிகம் கொண்டவர் ஆவார்

ஆளவந்தாரின் பிரிவு அவரை வாட்டியது.அதனால் உடல் நலம் குன்றி படுக்கையில் வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற உடன் இருந்தவர்கள் , ஆசானின் பிரிவே இதற்குக் காரணம் என அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்

அவரை பல்லக்கில் ஏற்றினர்.ஆசானைக் காணப்போகிறோம் என்ற எண்ணமே..அவருக்கு உடல் தேறத் தொடங்கியது

திருவனந்தபுரத்தில் எம்பெருமானை தரிசித்துவிட்டு ஆளவந்தார் திரும்பி வந்த போது பல்லக்கைக்  கண்டார்.மடத்தை பொறுப்பாக கவனிக்காமல் அவர் வந்ததைக் கண்டு"வாரியாண்டாரே! பரதன், ராமபெருமான் கட்டளைக் கிணங்க நந்திக்கிராமத்தைவிட்டு அகலாமல் இருந்தார்.ஆனால் நீயோ என் கட்டளக்கு கீழ் படியாது வந்துவிட்டாய்" என்று கடிந்து கொண்டார்.
அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாத வாரியாண்டார் மயங்கி விழுந்தார்

தன் பிரிவுதான் வாரியாண்டானின் நிலைக்குக் காரணம் என மற்றவர்கள் மூலம் அறிந்த, ஆளவந்தார் அவரை எழுப்பி..ஆறுதல் கூறினார்.

ஆளவந்தார், வாரியாண்டானை எம்பெருமானை தரிசித்துவிட்டு வரச் சொன்னார்.ஆனால் அவரோ "ஆரியப் பெருமானே எனக்கு  அரங்கனும் நீங்களே..அனந்தபத்மனாபனும் நீங்களே! உங்களைப் பிரிய இயலாது" என்றார்.

பின் குருநாதருடன்  ஸ்ரீரங்கம் திரும்பினார்.

"ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே" என இதையே திருக்கோளூர்ப் பெண் கூறினாள்

(இங்கு ஆரியன் என்பது உயர்ந்தவர் என்ற பொருளில் ஆளவந்தாரைக் கூறியது)

No comments:

Post a Comment