Friday, November 11, 2016

78 - வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே

கூரத்தாழ்வாரின் மகன் பராசர பட்டர்.அவர் குழ்ந்தையாக இருந்த போது, காவிரி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்

அப்போது, சர்வக்ஞ பட்டர் என்பவர் பல்லக்கில் ஏறி தனது சிஷ்யர்கள் படைசூழ வந்து கொண்டிருந்தார்.சிஷ்யர்கள் அவர் புகழைப் பாடி வந்தார்கள்

ராமானுஜர், கூரத்தாழ்வார்,முதலியாண்டான்,எம்பாரும் வசிக்கும் ஊரில் இப்படி ஒருவர் வருவதை பராசர பட்டர் விரும்பவில்லை.

தன் கையினால் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்ட அவர், அந்த பல்லக்கை தடுத்து நிறுத்தி சர்வக்ஞரிடம், நீங்கள் திறமைசாலி எனில், என் கையில் உள்ள மண் எவ்வளவு என சொல்ல முடியுமா? என்றார்.

"மண் கோடிக்கணக்கில் இருக்கும்...மண்ணை எண்ண முடியுமா" என்ற சர்வக்ஞர் கேலியாக சிரித்தார்

உடனே பராசரர்.."என்னால் சொல்ல முடியும்" என்றார்.

வியந்த சர்வக்ஞர்"சொல் பார்ப்போம்" என்றார்

"ஒரு கைப்பிடி மண்" என்றார் பட்டர்

சிறுவனின் திறமையைக் கண்டு தலைவணங்கிய சர்வக்ஞர். அந்தக் குழ்ந்தை யார் என வினவ..கூரத்தாழ்வாரின் மகன் என அறிந்தார்.

குழ்ந்தையை தன் பல்லக்கில் ஏற்றி வந்து கூரத்தாழ்வார் வீட்டில் கொண்டு வந்து விட்டார்

வாசலில் பிள்ளை உறங்காவில் தாசரின் மனைவி பொன்னாச்சியார் குழ்ந்தையை அதன் தாய் ஆண்டாளிடம் ஒப்படைத்து, "குழ்ந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.கெட்ட கண்கள் அவர் மீது பட்டுவிடப் போகிறது" என்றாள்

பின்னாளில்..பராசர பட்டர் வளர்ந்ததும், ராமானுஜரின் அந்திம காலத்தில் ராமானுஜர் , பராசரரை அழைத்து,திருநாராயணபுரம் சென்று,அங்கு வேதாந்தி என்பவரை வாதத்தில் வென்று வருமாறு கூறினார்

பட்டரும் அப்படியே திருநாராயணபுரம் சென்று, வேதாந்தியை வாதத்திறமையால் வென்று அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார்
அவருக்கு நன் ஜீயர் எனப் பெயரிட்டார்.அவரை வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடிக்க வைத்தார்

நான் என் வாதத் திறமையால் பட்டரை வென்றேனோ என்பதையே "வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே" (இல்லையே..அதனால் நான் இங்கிருந்தால் என்ன ஆல்லது இவ்வூரை விட்டு வெளியேறினால் என்ன) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment