Wednesday, November 9, 2016

74 - என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!

உபரிசரன் தர்மத்தின் படி நாட்டை ஆள்பவன்.அதனால் தர்மதேவதை மகிழ்ந்து அவன் பாதங்கள் பூமியில் படாது வானத்தில் நடக்கும் வசுஆக அவனை ஆக்கியது

ஒருநாள் ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் யாகத்தில் பலியிடும் விலங்குகள் குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது.

வேதத்தின்படி, எந்த ஒரு விலங்கினையும் கொல்லக் கூடாது.ஆனால், யாகம் நடைபெறுகையில் ஆடு போன்ற விலங்கினை தீயில் இடுவது வழக்கமானது.

அனால், விலங்குகளை கொல்லக்கூடாது என்பதால், ஆடு போன்ற உருவை தானியங்களில் உருவாக்கி அதை யாகத்தில் இட்டனர் ரிஷிகள்

இதற்கு தேவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த யாகத்தில் உயிரினமான் ஆட்டையே இட வேண்டும் என்றனர்

இருவர்களுக்குள் தகாராறு ஏற்ப்ட அவர்கள் உபரிசரனை அணுகி, தர்மத்தின் படி அவர் முடிவைச் சொல்லச் சொன்னார்கள்

உபரிசரனைப் பொறுத்தவரை அனைத்து உயிர்களும் தன்னைப் போல என எண்ணுபவன்.ஆகவே, அவன் ரிஷிகள் சொன்னதும், செய்வதுமே சரி என்றான்

இதனால் கோபமுற்ற தேவர்கள் அவனை பாதாள உலகம் செல்ல சபித்தனர்.

ஆனால்..அதனால் அவன் கலக்கமடையவில்லை.அது, அவனுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை

அப்படிப்பட்ட உபரிசரன் போல பிற உயிர்களும் என்னைப் போல என்றேனா என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்


1 comment:

  1. உபரிசரன் போல பிற உயிர்களும் என்னைப் போல என்றேனா என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்...நாராயணாய

    ReplyDelete