Friday, November 11, 2016

79- வாயில் கைவிட்டேனோ எம்பாரைப் போலே

முதலில் கோவிந்த பட்டராய் இருந்த ஆச்சார்யார் எம்பார், ராமானுஜரின் உறவினர்

இவர் ஒருமுறை காசிக்குச் சென்று கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது.அதை எடுத்து வந்து காளஹஸ்தியில் வைத்து கோயில் கட்டினார் அவர்

பெரிய திருமலை நம்பியிடம், திருமலையில் ராமாயணத்தின் உள்ளர்த்தங்களை அறிந்து கொண்டிருந்த ராமானுஜர் எம்பார் பற்றி சொல்ல..அவரை திருமலைநம்பி, வைணவத்தில் ஈடுபட வைத்தார்.

ஒருசமயம், எம்பார்..தன் கையை , வாயைத் திறந்து கொண்டிருந்த ஒரு பாம்பின் வாயில் வைத்திருந்தார்.

இதைக்கண்ட ராமானுஜர், "பாம்பின் வாய்க்குள் கைவைக்கலாமா?"என வினவினார்.

உடனே எம்பார் சொன்னார்.."அந்த பாம்பு தன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது.நாக்கினுள் முள் ஒன்று தைத்திருந்தது.அதை எடுத்து விட்டேன்.அது ஓடிவிட்டது.'என்றார்.

மேலும் சொல்கையில், "வைணவனின் அடிப்படை தர்மம் மனித நேயம், கருணை, இரக்கம். அதனால் பாம்பினிடம் இரக்கப்பட்டு, மனித நேயத்தால் அதன் வாயினுள் கையைவிட்டேன்" என்றார்

அந்த எம்பாரைப் போல கருணை உள்ளத்தோடு பாம்பின் வாயில் கையை விட்டேனோ (இல்லையே! ஆகவே நான் இந்த ஊரில் இருந்தால் என்ன..வெளியே போனால் என்ன) என்கி றாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment