Friday, November 4, 2016

67-அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே

சீதையை திருப்பி அனுப்பி விடும்படியும், ராமனுடன் சமாதானமாய் சென்றுவிடும் படியும் பல அறிஞர்கள் ராவணனுக்கு அறிவுரை வழங்கினார்கள்

ஆனால் ராவணன் செவி சாய்க்கவில்லை.

மாரீசன்,சீதா பிராட்டி,விபீஷணன், கும்பகர்ணன்.மால்யவான் போன்றோரும்..அறிவுரை வழங்கினர்

இவர்களுள் மால்யவான் என்பவர் ராவணனின் தாய்வழிப் பாட்டன்

வயதானவர்,அறிவாளி,அனுபவம் நிறைந்தவர் அவர் ராவணனிடம் சொல்கிறார்

"ராவணா! ராமனுடன், அவனது வலு தெரியாது சண்டைக்குப் போகாதே!
மனிதர்களும், குரங்குகளும் ராமனைக் காக்க உள்ளனர்.அவர்கள் உனக்கு எதிரிகள்.மேலும், ராமன் ,ஒரு மனிதனாய்த் தெரியவில்லை.அவன் விஷ்ணுவின் அவதாரம்.நம் படை முழுதும் போரில் அழியும்.ஆகவே சீதையை ராமனிடம் ஒப்படைத்து, சமாதானமாய்ப் போய்விடு "

மால்யவானின் இந்த அறிவுரைகளுக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை

அந்த மால்யவானைப் போல அனுகூலம் சொன்னேனோ (எம்பெருமான் பற்றி) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்



No comments:

Post a Comment