Friday, November 4, 2016

68 - கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே


"கள்வன்: என்பது ஸ்ரீமன்நாராயணனுக்கு இருக்கும் பல பெயர்களில் ஒன்றாகும்.கள்வன்..எனில்..திருடுவது, ஏமாற்றுவது என்று பொருள்.எம்பெருமானின் பக்தர்களின் நலனுக்காக இதையும் செய்வார்.அவரது திவ்யதேசங்களில் ஒன்றில் கள்வன் என்ற பெயரிலேயே காணப்படுகிறார்

மகாபலி யாகசாலையில் வாமனனாக சிறு உருவில் தோன்றி, மூன்று அடி நிலம் கேட்டு, திருவிக்ரமனாக மாறி..உலகை அளக்கிறார் எம்பெருமான்.அந்நேரம் அசுரர்களின் லோககுரு நாராயணனை கள்வன் என் கிறார்

நம்மாழ்வாரையும் லோககுரு எனலாம்.பல பாசுரங்களில் பெருமானை அவர் கள்வன் என் கிறார்.திருவாய்மொழியில், "கொள்வான் அவன் மாவலி மூவடி தா என்ற கள்வனே" என் கிறார் (வாமன அவதாரத்தை)

தவிர்த்து, சிவபெருமான் ஒரு சமயம் நாராயணனுக்கு வரம் ஒன்று அளித்திருந்தார்.அதை கிருஷ்ண அவதாரத்தில், கைலாயம் சென்று கண்ணன் கேட்கிறான்.அனைத்து உலகிற்கும் எம்பெருமானே தந்தை..அவர் சிவனிடம் வரம் கேட்பதைக் கண்ட சிவபெருமான் "கள்வனே" என் கிறார்


(தவிர்த்து திருவாய்மொழியில் ஒரு பாடல்-

கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் 
உள்ளே தோற்றிய இறைவ!’ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே.
பொழிப்புரை
வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாகவுடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும்  நின்னிடத்தினின்றும் தோன்றச்செய்த இறைவனே!’ என்று, கருடவாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்)

திருமங்கையாழ்வாரும் எம்பெருமானை "கார்வனத்து உள்ளே கள்வா" என் கிறார்

இப்படியெல்லாம் லோககுருக்கள்  எம்பெருமானை "கள்வன்" என்று அழைத்தாற்போல நான் அழைக்கவில்லையே..இவ்வூரில் இருக்க என்ன தகுதி என்றாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment