Tuesday, October 4, 2016

முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே - 10

பிரம்மனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா.கௌதம ரிஷியின் மனைவி

தினமும் விடியற்காலை சேவல் கூவியதும், கௌதமர் நதியில் நீராட சென்றுவிடுவது வழக்கம்

இதை அறிந்த இந்திரன், ஒருநாள், விடிவதற்கு முன்  சேவல் போலக் கூவி   விடிந்தாற்  போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான்.கௌதமரும், வழக்கம் போல நீராடச் சென்று விட்டார்

அவர் இல்லாத அந்நேரத்தில் இந்திரன், கௌதமரி ன் உருவத்தில் குடிலுக்குள் சென்று அகல்யையைப் புணர்ந்தான்

அகல்யாவிற்கும், அது தன் கணவனில்லை எனத் தெரிந்தது.ஆனாலும் அவள் அவனைத் தடுக்கவில்லை

ஏதோ சந்தேகம் ஏற்பட  கௌதமர் வீடு திரும்பினார்/.அங்கு இருவரையும் ஒன்றாகக் கண்டு கோபம் மேலிட அகல்யாவைக் கல்லாகப் போகுமாறு சபித்தார்

இந்திரனுக்கும், அவன் எதை அடைய வேண்டும் என ஆசைப்பட்டானோ, அது ஆயிரமாக  அவனது உடல் முழுதும் வரட்டும் என சபிக்கிறார்

இருவரும், சாப விமோசனம் கேட்டு வேண்ட...இந்திரன் உடலில் அவை ஆயிரம் கண்களாக மாறட்டும் என விமோசனம் கொடுத்தார்.

அகலிகைக்கோ, பின் ஒரு நாளில் ஸ்ரீராமன் பாதங்கள் பட்டு, திரும்பப் பெண்ணாக மாறுவாள் என்றார்


ஸ்ரீராமன், விஸ்வாமித்திரருடன் மிதிலைக்கு வருகையில் கிடந்த கல்லில் ,   அவரது பாதம் பட அகலிகை பெண்ணாக மாறினாள்..

 ஸ்ரீராம பிரானின் பாதம் பட்ட அகலிகையா நான் ..எனக்கு இந்த ஊரில் இருக்க என்ன தகுதி என்பதை "முதலடியைப் பெற்றேனா அகலிகையைப் போலே' என்று உரைத்தாள் அப்பெண்

No comments:

Post a Comment