Sunday, October 23, 2016

அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடையாரைப் போலே - 48

பத்து வருடங்கள் தண்டகாரண்யத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ராமன் அகத்தியரின் குடிலுக்கு வருகிறான்.அவனுக்கு, அகத்தியர் ஆயுதங்களைக் கொடுக்கிறார்.

அவற்றைப் பெற்றுக் கொண்டு திரும்புகையில் ஜடாயூவைப் பார்க்கின்றனர் ராம லட்சுமணனும் பிராட்டியும்

ஜடாயூ, தசரதனின் நண்பன்.வயதில் மூத்தவர்,அருணனின் புதல்வர், கழுகளுக்கெல்லாம் அரசன்.அவருக்கு பிராட்டியை ராமன் அறிமுகப்படுத்துகிறான்

 அதற்குப்பின், ராவணன் பர்ணசாலையுடன் சீதையைத் தூக்கிச் செல்லும் போது ஜடாயூ பார்க்கிறார்.ராவணனுடன் போரிடுகிறார்.ராவணன் ஜடாயூவை வாளால் வெட்டி வீழ்த்துகிறான்

சீதையைத் தொலைத்த ராமனும் லட்சுமணனும் அவளைத் தேடிச்செல்கையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜடாயூவைப் பார்க்கின்றனர்.ராவணன், பிராட்டியைக் கொண்டுச் சென்ற தெந்திசையைக் காட்டிவிட்டு ஜடாயூ மரணம் அடைந்தது

ஜடாயூவிற்கு ,ராமன் நீர்க்கடன் செய்கிறான்.

இதைவிட ஜடாயூவிற்கு வேறென்ன பாக்கியம் வேண்டும்

அப்படிப்பட்ட ஜடாயூ போல சீதாபிராட்டிக்கு கைங்கர்யம் என்னால் செய்ய முடியவில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment