Friday, October 28, 2016

61- அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே

சோழ மன்னன் தொல்லைகளை பொறுக்க முடியாமல் ராமானுஜர் கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரத்திற்கு சென்று விடுகிறார்.

பெரிய நம்பிகள் இறந்தது, கூரத்தாழ்வார் பார்வை இழந்தது எல்லாம் முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்

பெரிய நம்பிகளின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார் கூரத்தாழ்வார்

ராமானுஜரும் அங்கு இல்லாததால் அவர் மனம் மிகவும் வேதனைப்பட்டது.ஆறுதல் வேண்டி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்

ராமானுஜருக்கு நெருக்கமானவர்கள் யார் வந்தாலும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சோழ மன்னன் கட்டளை இட்டிருந்தான்

ஆகவே கோயில் வாயில் காப்பான் ஒருவன் அவரை உள்ளே விட மறுத்து விட்டான்

ஆனால் வேறொரு காப்பாளனோ, "ராமானுஜருக்கு இவர் வேண்டியவராய் இருந்தாலும், இவர் நல்லவர்.இவரை உள்ளே அனுமதிக்கலாம்' என்றபடியே அவரை கோயிலுக்குள் செல்ல அனுமதித்தான்

ஆனால் கூரத்தாழ்வார் சொன்னார்,"ராமானுஜருடன் பழக்கம் உள்லவன் என்பதால் கோயிலுக்குள் அனுமதிக்கிறேன் என்றால்..உள்ளே செல்கிறேன்.அதைவிட்டு..வேறு எந்த காரனத்தாலும் உள்ளே செல்ல அனுமதிக் கொடுத்தால்..அப்படியாயினும் உள்ளே சென்று எம்பெருமானை த்ரிசிக்க வேண்டாம்"

என்று சொல்லி விட்டு கூரத்தாழ்வார் வெளியேறினார்

அதுபோல நான் ஆசார்யாருக்கு வேண்டியவள் என்று கூறிவிட்டு அவன் வேண்டாம் என்றேனா..இல்லையே..அதனால் திருக்கோளூற் விட்டுச் செல்கிறேன் அன்றாள் அப்பெண்

No comments:

Post a Comment