Sunday, October 9, 2016

தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே -22

வசுதேவரின் மனைவி தேவகி. தேவகியின் சகோதரன் கம்சன்

வசுதேவர்- தேவகிக்கு பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை, கம்சனுக்கு எமன் ஆவான்

இதைக் கேள்விப்பட்ட கம்சன் அவர்களைக் கொல்ல முயற்சிக்கிறான்

அப்போது, தேவகி, தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை, அவனிடமே தந்து விடுவதாகக் கூற, கம்சனும், அவர்களை மதுரை சிறையில் அடைக்கிறான்

தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழ்ந்தை சங்கு சக்கரத்துடன் பிறக்க, தேவகியும் "நீ யார்?" என வினவுகிறாள்

"முன்பு ஒருமுறை சுவாயம்புவ மனுவின் காலத்தில், அதாவது கிருதயுகத்தில் கிருதபா- ப்ருச்னி புதல்வனாக நாராயணன் அவதரித்தார்.ஹரி என அவருக்குப் பெயர்.அந்தத் தம்பதிகள் இருவரும் அடுத்து வரும் இரு யுகங்களிலும் நாராயணனே தங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என வேண்டுகின்றனர்

எனவே, த்ரேதா யுகத்தில் அதிதி காச்யபர் தம்பதிக்கு வாமனனாகவும், அடுத்து துவாபரயுகத்தில் தேவகி, வசுதேவருக்கு கிருஷ்ணனாகவும் அவதரித்தார்

எம் பெருமான் தேவகியின் வயிற்றில் வந்து பிறப்பதற்கு தேவகி எவ்வளவு பேறு பெற்றிருக்க வேண்டும்...அப்படிப்பட்ட பேறு எனக்கு இல்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

No comments:

Post a Comment