Thursday, October 6, 2016

ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே - 13

திருமழிசை என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஊராகும்.பல முனிவர்கள் வாழ்ந்த இத்தலத்தில் பார்கவர் என்ற மகாமுனிவர் தவமேற்கொண்டார்.

அந்த தவத்தைக் கலைக்க அப்சரஸ் போன்ற பெண் முற்பட்டார்.அதன் விளைவாக அவர்கள் இருவருக்கும் பிண்ட வடிவில் ஒரு சிசு பிறந்தது

அந்த பிண்ட வடிவமான ஆண் சிசுவை ஒரு கோயிலில் போட்டு விட்டு அகன்று விட்டனர் இருவரும்

கருணையே வடிவான மகாலட்சுமி தாயார் அந்தக் குழந்தையின் மீது கருணை கொண்டு அதன் அவயங்களை வளர்ச்சியடையச் செய்து பூரணனாக்கினாள்.பின்னர், அக்குழந்தையின் அழு குரல் கேட்டு அவ்வழியேச் சென்ற பிரம்புக் கூடை முடையும் ஒருவன் அக்குழந்தையை எடுத்து வளர்த்தான்.அக்குழந்தையே திருமழிசை ஆழ்வார் ஆவார்

திருமழிசை ஆழ்வார் வேதங்கள் அனைத்தும் கற்றார்.பல சமய நூல்களையும் கற்று தேர்ச்சி பெற்றார்

பின், பேயாழ்வாரை ஒருமுறை சந்தித்தார்  ,

 தனது வாதத் திறமையினாலும்,யோகநிஷ்டையினாலும் பல யோகிகளை வெற்றி கண்டார்

அப்படிப்பட்ட திருமழிசை ஆழ்வாரைப் போல ,பல சமயங்களையெல்லாம் ஆராய்ந்து இறுதியாக வைணவமே சிறந்தது எனக் கொண்டவளா நான் என்பதையே ஆராய்ந்துவிட்டேனோ திருமழிசையார் போல  என் கிறாள் இப்பெண்

No comments:

Post a Comment