Sunday, October 9, 2016

அனுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே - 25

ஸ்ரீராமர், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதா பிராட்டியை லங்கைக்குச் சென்றால் தானே மீட்க முடியும், ராவணனையும் வதம் செய்ய முடியும்.

அதற்குக் கடலைக் கடந்தாக வேண்டும்.கடலைக் கடப்பதெனில் கடல் பாலம் ஒன்றை அமைத்திட வேண்டும்..

அதனால், கடலில் பாலம் கட்ட அவருக்கு வானரங்கள் உதவி செய்தன..பெரிய ..பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டன.பாறைகளைத்தான் போட்டனவேத் தவிர..பாறைகளுக்கிடையே..பூச்சு வேலை நடைபெறவில்லை

இதைப்பார்த்த அணில்கள், பெரும் படையுடன் கூடின.அவை நீரில் நனைந்து மணலில் புரண்டன.ஒட்டிக் கொண்ட மணலை பாறைகளின் இடுக்குகளில் உதிர்த்து விட்டுப் போயின...பூச்சு வேலைக்கு உதவுவது போல

பெரு யாத்திரைசெல்லும் பாறைகளைத் தூக்கிச் செல்லும் வானரங்களுடன், உடலில் மணலை ஒட்டிக் கொண்டு அணில்கள் அனுயாத்திரை செய்தன

அப்படி, அணில்களும், குரங்குகளும் ஸ்ரீராமருக்கு கைங்கர்யம் செய்ததைப் போல ஏதும் செய்யாது மரம் போன்ற மனதுடன் இருப்பதாக தொண்டரடிப் பொடி ஆழ்வார் வருந்தி பாடியுள்ளார்

அணில் செய்த அந்த கைங்கர்யம் மிகவும் சிறியது தான்.ஆனால்..அந்த அளவு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கூட எனக்கு இல்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment