Saturday, October 8, 2016

அவன் தெய்வம் என்றேனோ மண்டோத்ரியைப் போலே- 19

ஒரு நிலையில் "இவள்தான் சீதையோ" என சந்தேகப்பட்டானாம் அனுமன், மண்டோதரியைப் பார்த்து

மண்டோதரியின் கற்பு நெறியை போற்றும் கம்பர், தன் புத்தரர்களான அக்ககுமரனும், இந்திரஜித்தும் மாண்டபோது கதறி அழுதாள் என் கிறார்,மகளிரின் அறிவுரைகளைக் கேட்கும் போக்கு மன்னர்களுக்கு இல்லையே என வருந்துகிறாளாம்.

ராவணன் இறந்த பின் ராமனின் வில் திறமையைப் பாராட்டுகிறாள்

ஆனால் வால்மீகி ராமாயணத்திலோ, ராவணன் இறந்து கிடப்பதைக் கண்டவள்..

:அன்புக் கணவரே! உங்கள் சக்தி அளப்பறியது.இருப்பினும் ராமனை உங்களால் எதிர்க்க முடியாது.மிகுந்த தவ வலிமையிலும், அதனால் பெற்ற வரத்தினாலும் நீங்கள் கர்வம் அடைந்துள்ளீர்கள்.அதனால் இப்புவிக்கு பாரமாகி விட்டீர்கள்.இந்த ராமன், மகாவிஷ்ணுவின் அவதார  ம் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டீர்கள்" எனக் கதறுகிறாள்

ஆக மண்டோதரி ராமனை ஒரு அவதாரமாகவேக் காண்கிறாள்.

அப்படிப்பட்ட மண்டோதரியைப் போல..ராமனை தெய்வம் எனக் கூறமுடியாமல் போனதால் நான் இங்கிருந்து என்ன பயன் என் கிறாள் அந்தப் பெண்

No comments:

Post a Comment