Tuesday, October 4, 2016

தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே - 8


மகராஜா   உத்தானபாதனுக்கு   இரு மனைவிகள்.மூத்த்வள் சுநீதிக்கு பிறந்த்வன் துருவன்.இரண்டாம் மனைவி சுருசிக்குப் பிறந்தவன் உத்த்மன்.
உத்தானபாதனுக்கு சுநீதியைவிட சுருசி மீது அன்பு அதிகம்.

ஒருநாள் துருவனை மன்னன் தன் மடியில் அமர்த்தி, முத்தமிட்டான்.அதைக்கண்ட சுருசி கோபமடைந்து துருவனை விரட்டி அடித்தாள்.

துருவன் அழுதபடியே, அவள் தன்னை விரட்டியதன் காரணம் கேட்க"உன் தந்தை மடியில் அமர நீ என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்.இல்லையெனில் மாகாவிஷ்ணுவிடம் வரம் பெற வேண்டும்" என்றாள்.

துருவன் உடனே இறைவனை நாடி கானகம் போனான்.

வழியில், நாரதர் வந்து, "நீ சிறுவன்...திரும்பிப்போ" என்றார்.துருவன் கேட்கவில்லை

மகாவிஷ்ணுவைக் காண்பதே என் குறிக்கோள்.அதற்கான உபாயத்தைக் கூறுங்கள் என்றான்.

அதற்கு நாரதர், "முதலில் உணவில் நாட்டக் கூடாது.உணவு உண்பதை விட வேண்டும்" என்றார்

உண்ணுவதை நிறுத்தினான் துருவன்.பின்னர், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தினான்.அவனின் தியானம், உச்சநிலைக்குச் சென்றது.இறைவன், அவன் ஆத்மாவிற்குள் நுழைந்தார்.அதை, துருவன் உணர்ந்து கொண்டாலும்,அவனது லட்சியம் விஷ்ணுவை நேரில் பார்க்க வேண்டும் என்பதே

நாரதர் அதற்கும்   ஒரு உபாயம் சொல்கிறார். "பிரணவத்தில் சுவாசத்தை நிலை நிறுத்த வேண்டும்"

துருவன் அதன்படி செய்ய ..எங்கும் "ஓம்" என ஓங்காரம் ஒலிக்கிறது. மகாவிஷ்ணு அவன் முன் தோன்றி, அவனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டார்

அப்படிப்பட்ட துருவனைப்போல, சர்வலோகத்திற்கும் தந்தையான மகாவிஷ்ணுவைத் தேடி அலையும் பொருட்டு "தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே" என் கிறாள் அந்தப் பெண்

No comments:

Post a Comment