Thursday, October 27, 2016

நில்லென்றெனப் பெற்றேனோ இடையற்றூர் நம்பியைப்போலே - 58

இடையற்றூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் இடையற்றூர் நம்பி.

இவர் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கு தவறாமல் முதல்நாளே சென்று, கடைசி நாள் உற்சவம் முடியும் நாள்வரை அங்கேயே இருப்பார்.

பின்னர், திரும்பி வந்தும் அது பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.

அவருக்கு நூறு வயது ஆனாது.உடல் தளர்ந்தது.அதனால் அம்முறை பிரம்மோற்சவத்திற்கு முதல்நாளே அவரால் செல்ல இயலவில்லை.ஆ றாவது நாள்தான் அவர் அங்கு சென்றடைந்தார்.ஒரு தூணில் சாய்ந்து நின்று கொண்டு நம்பெருமானை தரிசித்தார்

நம்பெருமாளும் ,பவனி வரும்போது  அவரைப் பார்த்து"முதல்நாளே வரும் நீ ஏன் இம்முறை ஆறாம் நாள் வந்தாய்?"என வினவினார்

அதற்கு இடையற்றூர் நம்பி, தன் உடல்நிலையேக் காரணம் என்றார்.

அதைக்கேட்ட நம்பெருமாள்.."சரி...இனிமேல் நீ இங்கேயே நில் (இரு)" என்ற நம்பெருமாள் அடுத்தத் தெருவிற்கு பவனி செல்கையில், இடையற்றூர் நம்பி நின்ற இடத்திலேயே உயிரிழ்ந்தார்.

என்னை அதுபோல எம்பெருமான் நில் என்று சொல்லப் பெற்றேனா இடையற்றூர் நம்பியைப் போலே..என்கிறாள் திருக்கோளூற்ப் பெண்  

No comments:

Post a Comment