Sunday, October 9, 2016

ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே - 23

வசுதேவர்- தேவகிக்கு கிருஷ்ணர் பிறந்தார்..சிறைச்சாலையில்

நான்கு புஜங்கள்..அவற்றுள் கதை,சங்கு,சக்கரம்,தாமரை மலர்,மார்பில் மருவாக ஸ்ரீவத்சம்,பட்டுப் பீதாம்பரம், கஹ்ழுத்தில் மாலை,வைர மணிமுடி,காதில் மின்னும் குண்டலங்கள்...கண்ணன் அலங்காரப் புருஷனாகக் காட்சியளித்தார்

வசுதேவர், குழ்ந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.இந்த அவதாரப் புருஷன் மூலம் கம்சன் வதம் நடக்கப் போகிறதே! ஆனால் குழந்தை இப்படி இருந்தால்...என பதபதைப்புடன் "நீயே மூவுலகை ரட்சிக்கும் நாராயணன் என நான் அறிவேன்,ஆனால், இந்தக் கோலம் உனக்கு இப்போது உசிதமல்ல.உனது தெய்வ அம்சங்களான நான்கு தோள்கள், சங்கு, சக்கரத்தை மறைத்துக் கொள்" என வேண்டினார்

கண்ணனும் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு மானிடக் குழந்தை ஆனார்

எம்பெருமானின் ஆழியை மறைத்துக் கொள்ளச் சொல்லி வசுதேவர் கேட்க கண்ணனும் கேட்டாரே! அந்த பாக்கியம் நான் செய்யவில்லையே! என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

No comments:

Post a Comment