Monday, October 17, 2016

அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே - 37

கஜேந்திரதாசன் என்று அழைக்கப்பட்டவர் திருக்கச்சி நம்பிகள்.காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் அவரிடம் நேரில் பேசும் பாக்கியம் பெற்றவர்

பெருமாளுக்கு சரீரம் மூலம் செய்யும் கைங்கர்யமே பெரிய கைங்கர்யமாகும்  என வாழ்ந்து வருபவர்.அவரிடம் ஸ்ரீராமானுஜர் சில சந்தெகங்களைக் கேட்டார்.திருக்கச்சி மயிலிறகால் செய்யப்பட்ட அந்த பெரிய ஆலவட்டத்தைத் தூண் மீது சாய்த்துவிட்டு வந்தார்

அவர் ஸ்ரீராமானுஜரைப் பார்த்து, "நான் முதலில் ஸ்ரீரங்கப் பெருமாளுக்கு ஆலவட்டம் வீசச் சென்றேன்.அவரொ, தான் காவிரிக்கரையில் இருப்பதாகவும், திருமலை வெங்கடநாதனுக்கு ஆலவட்டம் வீசச்சொன்னார்.ஆனால், அந்த திருவேங்கடநாதனோ, தான் மலைகள் சுழ்ந்த இடத்தில் இருப்பதாகவும், யாகக்குண்டங்கள் நிரைந்த காஞ்சியில் இருக்கும் எம்பெருமானுக்கு ஆலவட்டம் வீசச் சொன்னார்கள்.காஞ்சியில் எனது கைங்கர்யம் தொடருகிறது.அதனாலேயே, எம்பெருமானிடம் பேசும் பாக்கியம் கிடைத்தது" என்றார்.

ஸ்ரீராமானுஜர், "என்னிடம் ஆறு கேள்விகள் உள்ளன.அதற்கான பதிலை, பெருமாளிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார்.

அவரது ஆறு கேள்விகள்

1) பரம்பொருள் என்பவர் யார்
2)நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உண்மை தத்துவம் எது?
3)பரமனை அடைவடஹ்ற்கான உபாயம் எது?
4) மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா/
5)மோட்சம் பெறுவது எப்போது
6)குருவாக யாரை ஏற்பது?

ஸ்ரீராமானுஜர் எழுப்பிய சந்தேகங்களை திருக்கச்சியார் பெருமாளிடம் கேட்க, அவர் உரைத்த பதில்கள் .

விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை தந்துவங்களாயின

1)பரம்பொருள் நாமே! அனைவரும் அடைய வேண்டிய பரம்பொருள் நாமே

2)பேதமை தர்சனம்.எதுவும் மாயைஅல்ல.எல்லாமே உண்மை.விசிஷ்டாத்வைதமாகிய ஆத்மா இறைவன்.இதுபற்றிய வேறுபாடே தத்துவம்

3)உபாயம் ப்ரபத்தியே..அகங்காரத்தை விடுத்து இறைவனை சரணடைவதே உபாயம்.அதாவது பிரபத்தி எனும் சரணாகதியே உபாயம்

4)அந்திமஸ்மிருதி வேண்டாம்.இறக்கும் தறுவாயில் மட்டும் இறைவனை எண்ணினால் போதாது.உடல் நன்றாக திறனோடு இருக்கையிலேயெ இறைவனை நினைத்தால் போதுமப்படியிருந்தால் இறக்கும் நேரத்தில் இறைவனுக்கு நம் சிந்த்னை வரும்

5)சரீரம் விடுகையில்மோட்சம் சரணம்.அடைந்தவருக்கு உடலை விடுகையில் மோட்சம்

6)பெரிய நம்பிகளை குருவாகப் பற்றுவது

(இப்படி ஒரு பதிலைத்தான் ராமானுஜம் எதிர்பார்த்தார் )

இப்படி எம்பெருமானிடம் நேரில் பேசும் பாக்கியத்தை நான் பெற்றேனோ திருக்கச்சியார் போலே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment