Sunday, October 2, 2016

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே - 4

ஸ்ரீராமன், ராவணனை வதம் செய்தார்.ஆனால், திருக்கோளூர் பெண்ணோ.ராவணனை வதைத்தது சீதா பிராட்டியே என் கிறாள்.

தசமுகனான, ராவணன் அழிய வேண்டும் என்பதற்காகவே சீதை,ராமனுடன் காட்டிற்கு வந்தாள்.தசமுகனுக்கு அழிவு ஏற்படும் வகையில் மாயமானைக் கேட்டாள்,லட்சுமணனைத் திட்டி அனுப்பினாள்.ராவணன் வந்தான்.சீதையைத் தூக்கிச் சென்றான்.இலங்கையில் சிறை வைத்தான்

"இலங்கையை மட்டுமல்ல.அகில புவனங்களையும்  சுடுவே ன்  ஆனால். நான் அப்படிச் செய்தால் அது ராமனின் வில்லாற்றலுக்குக் குறையை ஏற்படுத்தும்" என்று சீதை அனுமனிடம் கூறியதாகக் கம்பராமாயணம் சொல்கிறது

ராமன், ராவணனை வதைத்தாலும் அவன் அழிவிற்கு சீதையின் செயல்களேக் காரணமாக இருந்ததால், திருக்கோளூர் பெண்  ,"தசமுகனைச் சேற்றேனோ பிராட்டியைப் போலே' என் கிறாள்

No comments:

Post a Comment