Wednesday, October 26, 2016

இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே - 55


சூதாட்டத்தில் தருமர் மயங்கி, வீடு, வாசல்,நாடு,நகரம் அனைத்தையும் பணயம் வைத்து இழக்கிறார்.கடைசியில், சகோதரர்களையும், தன்னையும், திரௌபதியையும் தோற்றார்

கௌரவர் சபைக்கு பாஞ்சாலி, துச்சாதனனால் அழைத்து வரப்படுகிறாள்.அவளைத் துகிலுரிகையில்... தன்னைக் காக்க கண்ணன் ஒருவனால்தான் முடியும் என அவனை சரணாகதி அடைகிறாள்

ஆரம்பத்தில், தனது இருகைகளால் மானம் போகாது மறைத்து கண்ணனைக் கூப்பிடுகிறாள்.கண்ணன் வரவில்லை

பின், ஒரு கையால் மானத்தை மறைத்து, மறுகையால் கண்ணனை வணங்கி அலறுகிறாள்.கண்ணன் வரவில்லை

இறுதியாக, தன் இருகைகளையும் மேலே தூக்கி, முற்றிலும் அவனே கதி என "கோவிந்தா: " என அலறுகிறாள்.கண்ணன் வந்து ரட்சிக்கிறான்

எம்பெருமானை, சரணாகதி என வந்துவிட்டால், நம்மை அவன் காப்பாற்றுவான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்

நான் அந்த திரௌபதியைப் போல முற்றிலும் சரணம் என இருகையும் விட்டேனா...ஆகவே எனக்கு இந்த ஊரில் இருக்க என்ன தகுதி உள்ளது..ஆகவே..நான் போகிறேன் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment