Sunday, October 23, 2016

இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே - 50

சபரி வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவள்.

 மதங்க மாமுனிவரின் சிஷ்யை.மதங்கருக்கு மோட்சக் காலம் வந்தது..

தனக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் என சபரி, தன் குருவான மதங்கரிடம் வேண்டினாள்.

"இந்தக் காட்டின் வழியே ஸ்ரீராமன் வருவார்.அவருக்குக் கைங்கர்யம் செய்துவிட்டு, நீ மோட்சம் அடைவாயாக" என்றார் முனிவர்

தன் தள்ளாத அவயதிலேயும், ராமன் வருவான்...ராமன் வருவான் ..எனக் காத்திருந்தாள் சபரி

ராமன் வந்தான்..

வீடு போற்றற்குரிய மெய்நெறியினை முற்றும் அறிந்தவர்கள் கூறுவதைப் போல சபரிக் கூறியதையெல்லாம் ராமன் கேட்டான்.

இதைத் தவிர சபரிக்கு வேறு என்ன வேண்டும்.அவளுக்கு அதுவே இனியதானது

(இதைத் தவிர வேறு ஒரு கதையும் சொல்வதுண்டு.அது கதை தானேத் தவிர ராயணத்தில் அது பற்றியில்லை.அந்தக் கதை..
சபரி..தான் உண்ணும் பழங்களில் இனிப்பையறிந்து, அதை ராமனுக்குக் கொடுக்க எடுத்து வைத்து கொடுக்க ராமனும் அக்கனிகளை உண்டானாம்)

No comments:

Post a Comment