Wednesday, October 26, 2016

இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே - 56

வடுகநம்பி ஸ்ரீராமாநுஜரின் முதன்மைச் சீடர்களில் ஒருவர்.ராமானுஜருக்கு தொண்டு செய்வதையே தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டார்.ராமானுஜர் இவரது பாதங்களில் தனது கால்களை நீட்டியபடி தனது இறுதி மூச்சை விட்ட பெருமை வடுகனம்பிக்கு உண்டு

ஸ்ரீரங்கநாதருக்கு ரங்கநாதன் என்று பெயர்.உற்சவருக்கு நம்பெருமாள் என்று பெயர்.ஒருமுறை ராமானுஜர் நம்பெருமானின் கண்ணழகில் மயங்கி, "வடுகா..நம்பெருமானின் கண்களைப் பார்," என்றார்.

ராமானுஜரைத் தவிர வேறு எவரையும் ரசித்தறியா வடுகநம்பி,அவரைப் பார்த்தபடியே, "என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று சொல்லி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்


இப்படிப்பட்ட வடுகநம்பி ஒருமுறை பாய் காய்ச்சிக் கொண்டிருந்தார்.அப்போது நம்பெருமாள் திருவீதி புறப்பாடு சென்று கொண்டிருந்தது.

ராமானுஜர், "வடுகா..நம்பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும்.விரைந்து வா" என்றார்

அங்கு வந்து உம்பெருமாளைப் பார்த்துக் கொண்டிருந்தால்,இங்கு நம்பெருமாளுக்கு யார் பால் காய்ச்சுவார்கள்" என்று கேட்டார்.வடுகநம்பி.

அவரைப் பொறுத்தவரை ராமாநுஜரே நம்பெருமாள்

அந்த வடுகநம்பியைப் போல ஆசார்ய பக்தியில், பெருமாளையும் மறந்து, "இங்கு பால் பொங்கும் என்றேனா"(இல்லையே!).பின் நான் இங்கு ஏன் இருக்க வேண்டும் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment