Monday, October 24, 2016

இங்கும் உண்டு என்றேனோ பிரஹலாதனைப் போல் - 51

தனது தவ வலிமையால் அனைத்து தேவர்களையும் பணிய வைத்த அசுரன் இரண்யன்

அவனது மகன் பிரஹலாதன் , எல்லாமே மகாவிஷ்ணுவின் சொரூபம் என நினைப்பவன்.அவன், எட்டெழுத்து மந்திரத்தின் மீது பற்றுறுதியால் இருந்ததால் மரணத்துக்கும் அஞ்சாமல் இருந்தான்

"இரண்யா நம" என தன் தந்தை சொல்லச் சொன்னதைச் சொல்ல மாட்டேன் என்றதுடன்"ஓம் நாராயணாய நமஹ" என்ற திருமந்திரத்தைச் சொல்லி வந்தான் என்றேனோ பிர

;நீ சொல்லும் உன் மகாவிஷ்ணு எங்கிருக்கிறான்?" என இரண்யன் கேட்க, "அவர் தூணிலும் இருப்பார்...துரும்பிலும் இருப்பார்" என்றான் பிரகலாதன்

அதன் பிறகு தூணிலிருந்து நரசிம்மனாக எம்பெருமான் வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்தார்

அப்படிப்பட்ட பிரகலாதனைப் போல , எங்கும் நாராயணன் உண்டு  என்றேனோ என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment