Wednesday, October 26, 2016

இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே - 57

திருநாராயணபுரம் உற்சவர் செல்வநாராயணனின் சிலை, ஒரு சமயம் டில்லி பாதுஷாவிடம் இருந்தது.பாதுஷாவின் மகளுக்கு நாராயணன் மீது அளவுகடந்த பக்தி

ராமானுஜர் உற்சவரை மீட்க பாதுஷாவின் அரண்மனைக்குப் போனார்.அவர் சென்ற சமயம் இளவரசி அரண்மனையில் இல்லை.பாதுஷாவின் அனுமதியுடன் இளவரசியின் அந்தப்புரத்திற்குச் சென்று அங்கு செல்வநாராயணனின் விக்கிரகத்தைக் கண்டார்.

அவர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது.இதோ..என் செல்வப்பிள்ளை என உரக்கக் கத்தினார்

அந்தச் சிலை உடனே சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது.தன் சின்னஞ்சிறு   பாதங்களில் சலங்கை ஒலி ஒலிக்க...ராமானுஜரின் மடியில் ஏறி அமர்ந்து தன் இரு பிஞ்சுக் கரங்களால்..அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டது

அதுபோல இரு (கைகளால்)மிடறு (கழுத்து) பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப்போலே என ராமானுஜரிடமே திருக்கோளூர்ப் பெண் சொல்லிவிட்டு..இல்லையே ஆகவே இங்கு தங்க தனக்கு என்ன் தகுதி இருக்கிறது என்றாள்

(ராமானுஜரின் மடியில் இருந்த குழந்தை  பின் விக்கிரகமானது.அதை அவர் திருநாராயணர் கோவிலுக்கு எடுத்து வந்தார்.பாதுஷாவின் மகள் பின்னர் பெருமாளைத் தேடி வந்துநாராயணபுரத்தில் செல்வநாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள்.மூலவரின் பாதத்தில் வரநந்தினி என்ற  பெயரில் இருப்பதாக ஐதீகம்.வரநந்தினியை பீபீ நாச்ச்சியார் என்பர் உள்ளூர் மக்கள்,இக்கோயிலில் ராமானுஜரும் உபதேச முத்திரையுடன் காட்சியளிக்கிறார்)  

No comments:

Post a Comment