Friday, October 28, 2016

60- அவன் போனானென்றேனோ மாருதியாண்டான் போலே

சோழ மன்னனின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் ராமானுஜர், ஸ்ரீரங்கத்திலிருந்து, கர்நாடகாவில் இருந்த திருநாராயணபுரத்திற்கு வந்து தங்கியிருந்தார்.ஆனால் அவரால், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், கூரத்தாழ்வாரையும், பெரியநம்பிகளையும் மறக்க இயலவில்லை

ராமானுஜருக்கு மாருதியாண்டான் என்றொரு சிஷ்யன் இருந்தான்.அவன், அவ்வப்போது ஸ்ரீரங்கம் சென்று அங்கு கூரத்தாழ்வாரையும், பெரிய நம்பிகளையும் பார்த்து செய்திகளை அறிந்து வந்து ராமானுஜரிடம் கூறுவான்.அதுபோல ராமனுஜர் சொல்வதை அவர்கலீடம் சென்று உரைப்பான்

இதற்கிடையே, சோழ மன்னனுக்கு கழுத்தில் ஒரு பெரிய கட்டி வந்துஇறந்தான். மக்கள் அதனால் அவனை கிருமி பாண்டியன் என்பர்

அந்தச் செய்தியை அறிந்தான் மாருதியாண்டான்.அதேபோன்று, பெரிய நம்பிகள் இறந்த செய்தி, ஆழ்வார் கண்பார்வை இழந்தது எல்லாம் கேள்விப் பட்டு அச் செய்திகளை ராமானுஜருக்குத் தெரிவிக்க திருநாராயணபுரம் வந்தான்

ராமானுஜரைக் கண்டதும் "அவன் போனான்" (சோழமன்னன் இறந்தான்) என்பதைக் கூறினான்.ராமானுஜர் மகிழ்ந்தார்.

பின்னர், பெரிய நம்பிகள், கூரத்தாழ்வார் பற்றிக் கேள்விப்பட்டு மனம் வருந்தினார்

பின்னர், ஸ்ரீரங்கம் வந்தார்

மாருதியாண்டான் போல, "அவன் போனானேன்றேனொ" .இல்லாத நான் திருக்கோளூரை விட்டுப் போனால் என்ன என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment