Wednesday, October 26, 2016

கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே - 54

அனுமனை தென் திசைக்குச் சென்று சீதை இருக்குமிடத்தைத் தெரிந்துவரும்படி ராமன் உரைத்தான்.அடையாளமாகக் காட்ட கணையாழியைக் கொடுத்தான்.தானும், சீதையும் அறிந்த சில ரகசிய  நிகழ்வுகளையும் கூறியனுப்பினார்

கடலைக் கடந்த அனுமன், ஊரெல்லாம் சீதையைத் தேடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டான்.கணையாழியை அளித்து விவரங்களைக் கூறினான்

அங்கு, அரக்கர்கள் அனுமனின் வாலுக்கு தீயை வைத்தனர்.அத்தீயைக் கொண்டே இலங்கையை எரித்தான் அனுமன்.

பின்னர் ராமன் இருக்குமிடத்திற்கு வந்து,அனுமன் வரவிற்காகக் காத்திருந்த ராமனிடம் "கண்டேன் சீதையை" என்றான்

சிறிய திருவடி என போற்றப்படுபவன் அனுமன்.

கண்டுவந்தேன் (சீதையை) என்றேனோ திருவடியைப் போலே..என்று இந்நிகழ்ச்சி பற்றி திருக்கோளூர்ப் பெண் கூறுகிறாள்

No comments:

Post a Comment