Wednesday, October 19, 2016

அடி வாங்கினேனோ கொங்குப் பிராட்டியைப் போலே - 40

வைணவத்தில் ஆசார்ய சம்பந்தம் இல்லாது  எம்பெருமான்  சம்பந்தம் இருந்தும் பயனில்லை.ஆசார்ய சம்பந்தம் இருந்தா ல் எ ம்பெருமான் சம்பந்தம் தானே அமைந்து விடும்.இதற்கு கொங்கு பிராட்டியின் சரித்திரமே ஒரு உதாரணம்

ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்  .அவர் மடத்தில் சமைத்த உணவைத் தவிர வேறு எங்கும் உணவு உண்ணக்கூடாது என்ற நியமம் வரும் வரையில் அவர் வெளியில் பிட்சைக் கேட்டு உண்பதே வழக்கம்.இதற்கு மாதுகரம் என்று பெயர்.

இந்த மாதுகரம், ஒரு திருவிழாவைப் போல நடக்கும்.நூற்றுக் கணக்கான பக்தர்கள் உடன் வருவர்.அப்படி ஒருமுறை ஸ்ரீராமானுஜர் சென்ற போது ஒரு பெண்மணி அவரைத் தடுத்து நிறுத்தினார்.

அப்பெண்மணி கொங்கு தேசத்திலிருந்து வந்தவள்.தனது தேசத்தில் நீண்ட நாள் மழை இல்லாததால், அதை ஸ்ரீரங்கநாதரிடம் முறையிட ஸ்ரீரங்கம் வந்திருந்தாள்.வந்த இடத்தில், ஸ்ரீராமானுஜரை வீதி என்றும் பாராது, அதிகாரிகள், செல்வந்தர்கள், வயதானோர் எல்லாம் தண்டனிடும் காட்சியைப் பார்த்தாள்.அதனால், அவரை தடுத்து நிறுத்தினாள்

:"மற்றவர்கள் தண்டனிட்டு சேவிக்கும் அளவிற்கு தங்களிடம் இருப்பது என்ன?" என்றாள்

"என்னிடம் இருக்கும் ஒன்று மற்றவர்களி டம்  இல்லை.மற்றவர்களிடம் இருக்கும் ஒன்று என்னிடம் இல்லை" என்றார் ஸ்ரீராமானுஜர்

"அந்த ஒன்றை எனக்கு உபதேசிக்க வேண்டும்"

அப்பெண்ணை மடத்திற்கு வருமாறு பணித்தார்.அங்கு அவளுக்கு த்வயம் என்னும் மந்திரத்தை உபதேசித்து பஞ்சசம்ஸ்காரம் செய்வித்து வைணவப் பெண்ணாக மாற்றினார்.

நெடுநாட்கள் கழித்து ஊருக்குக் கிளம்ப நினைத்தாள் அப்பெண்.அப்போது அவர் உபதேசித்த த்வய மந்திரம் அவளுக்கு மறந்து போனது.அதை அவள் ஸ்ரீராமானுஜரிடம் கூறினாள்.அவரும் அவளுக்கு த்வயத்தை மீண்டும் உபதேசித்தார்.அவள் கிளம்பும் போது தனது திருவடிகளை (பாதுகைகளை) அவளுக்கு அளித்தார்

இதெல்லாம் நடந்து பல ஆண்டுகள் கழித்து, ஸ்ரீராமானுஜர் கொங்கு தேசம் வந்தார்.அப்போது அந்த அம்மையார் சமைத்த உணவை ஒரு சிறு அறைக்குள் எடுத்துச் சென்றுவிட்டு வருவதை அவரின் சீடர்கள் பார்த்தனர்.அறையினுள் சென்று பார்த்த போது,ஸ்ரீராமானுஜர் அவளுக்கு அளித்த பாதுகைகள் வைக்கப்பட்டு, அவற்றிற்கு அவள் நைவேத்தியம் செய்து விட்டு வருவதைப் பார்த்தனர்

அப்படிப்பட்ட கொங்கு பிராட்டியைப் போல திருவடிகளை தான் பெறவில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment