Monday, October 10, 2016

ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே - 27

ஸ்ரீராமர், லட்சுமணன்,சீதா பிராட்டி ஆகியோர் தண்டகாரண்யத்தில் முனிவர்களின் ஆசிரமத்தில் தங்கி, அவர்களுக்கு துன்பம் ஏற்படாமல் பத்து ஆண்டுகள் காத்தனர்

பின், மூவரும் கிளம்பி அகஸ்தியரின் ஆசிரமம் வந்தனர்

அகஸ்தியர் ராமனை வரவேற்றார்.ராமனும் அவரை வணங்கி நின்றார்.பின், அகஸ்தியர் சிவபெருமாள் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த சிவதனுசுவை ராமருக்குக் கொடுத்தார்

தவிர்த்து ஒரு வாளினைக் கொடுத்தார்
உலகம் முழுதும் ஒரு தட்டில் வைத்துஅகஸ்தியர் கொடுத்ததை மற்றொரு தட்டில் வைத்தாலும்...அகஸ்தியர் கொடுத்ததற்கு இணையாகாதாம்...கம்பர் சொல்கிறார்

தவிர்த்து, ஒரு சமயம் சிவபெருமான் மேருவை வில்லாக வளைத்து,மகாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டு திரிபுரத்தை எரித்ததாகக் கூறப்படும் அம்பினையும் கொடுத்தார்

அப்படி அகஸ்தியரைப் போல எம்பெருமானுக்கு நான் ஆயுதங்களைக் கொடுக்கவில்லயே (எனக்கு இங்கு இருக்க என்ன தகுதி) என்கிறாள் அப்பெண்

No comments:

Post a Comment