Saturday, October 8, 2016

அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே - 18

"அன்பினால் தாயை க்காட்டிலும் இனியவள்" என் கிறார் கம்பர் திரிசடையைப் பற்றிக் கூறுகையில்.

சீதைக்கு அசோகவனத்தில் கிடைத்த ஒரே ஆறுதல் திரிசடைதான்

அவளின் ஆறுதலால்தான் சீதை அசோகவனத்தில் உடிருடன் இருந்தாள் என்றே கூறலாம்

சீதை, தனக்கு ஏற்பட்ட கெட்ட சகுனங்களைக் கூறி அவளிடம் வருத்தப்பட்டாள். அதற்கு திரிசடை, தான் கனவு ஒன்று கண்டதாகக் கூரி, அவளுக்கு ஆறுதல் சொன்னதுடன் அக்கனவுப் பற்றிக் கூறுகிறாள்

"ராவணன், தன் பத்து தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு, கழுதை மீது ஏறி, யமன் இருக்கும் திசை நோக்கிப் போவதாகவும்,அவனின் புதல்வர்கள்,உறவினர்கள் அவன் சென்ற வழியிலேயே செல்வதாகவும்,அப்படிச் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வராதது போலவும் கனவு கண்டேன்.ராவணன் யாக குண்டங்களில் அகினிக்குப் பதிலாக செங்கரையான் புற்று வளரக் கண்டேன்..அவனது அரண்மனை ஒளி இழ்னஹ்து, இடி தாக்கி நொறுங்குவதாகக் கண்டேன்.பெண்யானைக்கு மதம் பிடித்தது போலவும், முரசுகள் இடியைப் போல முழங்குவது போலவும்,வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் கீழே வீழ்வது போலவும்..சூரியன் இரவு உதிப்பது போலவும்..கனவு கண்டேன்

மேலும், இலங்கை நகரே அழிவது போலவும், கோட்டை மதில்கள் தீப்பற்றி எரிவது போலவும், மங்கல கலசங்கள் கீழே விழுந்து நொறுங்குவது போலவும், எங்கும் இருள் சூழ்வது போலவும் கனவு கண்டேன்" என்று தான் கண்ட கனவுகளை அடுக்கிக் கொண்டே போனாள்

இப்படி துயரத்தில் ஆழ்ந்த சீதைக்கு ஆறுதல் கூறினாள் திரிசடை,இதன் மூலம் சீதைக்கு ஆறுதல் கிடைக்குமல்லவா?

அப்படி சீதையின் துயரை குறைக்க திரிசடை ஆறுதல் சொல்வது போல, நான் சீதைக்கு ஆறுதல் ஏதேனும் சொன்னேனா" என் கிறால் திருக்கோளூர் பெண்

No comments:

Post a Comment