Thursday, October 6, 2016

எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே - 12

ஆழ்வார்களில் பட்டர்பிரான் என்றால் அது பெரியாழ்வார் எனப் போற்றப் படும் விஷ்ணு சித்தரையே குறிக்கும்.இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார்

வேறு எந்த ஆழ்வாருக்கும் இல்லாத பெருமை இவருக்கு உண்டு.பெரியபிராட்டியை மகளாகவும், ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாகவும் அடையும் பேறு பெற்றவர்,கருடனின் அம்சம் எனக் கருதப் பட்டார்

எப்போதும்  வில்லிபுத்தூரிலுள்ள  வடபத்ரி பெருமானைச் சிந்தனையில்     கொண்டிருந்ததால் விஷ்ணு சித்தர் எனப்பட்டவர் ஆவார்

தாய் மாமன் கம்சனின் அழைப்பை ஏற்று கண்ணன் , பலராமனுடன் கோகுலத்திலிருந்து புறப்பட்டார்.வழியில் ஒருவர் கண்ணனுக்கும்,பலராமனுக்கும் மாலைகள் அணிவித்தார்.அதை ஏற்றுக்கொண்ட கண்ணன், அந்த பூ வியாபாரிக்கு அருள் செய்தார்.அவ்வியாபாரி வீடு பேறு பெற்றார் என்ற கதையைக் கேட்ட   விஷ்ணு சித்தரும், தானும் பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியம் செய்ய விரும்பினார்.அதனால், தன் குடிலை ஒட்டி பூந்தோட்டம் அமைத்து..பூக்களை இ றைவனுக்கு சமர்ப்பித்து வந்தார்

வல்லபதேவ பாண்டிய மன்னன் ஒரு வைணவ பக்தன்.ஒருநாள் அவன் மாறு வேடத்தில் இரவில் நகர் வலம் வந்தான்.அப்போது வைதீக அந்தணன் ஒருவன் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான்.வேறு ஊர்க்காரன் என்பதால் மன்னன் அவனை எழுப்பி, அவன் யார்? என விசாரித்தார்
அதற்கு  அவன் காசி சென்று விட்டு திரும்புவதாகவும், சேதுவிற்கு செல்வதாகவும் கூறினான்

மன்னனும் "பல ஊர்களுக்கு சென்றுள்ள நீ..எனக்கு ஏதேனும் நன்மொழிக் கூறு" என்றார்

அந்தப் பயணியும், "மழை காலத்திற்கு வேண்டியவற்றை மற்ற எட்டு மாதங்களிலும் இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் சேர்த்து வைப்பவனே புத்திசாலி" என்றிட்டான்

மன்னன் அதை மனதில் இருத்திக் கொண்டான்

அரண்மனை வந்ததும் யோசித்த மன்னன், தன்னிடம்  செல்வம் இருந்தாலும்,  மறுமை உலகிற்கு ஏதும் சேர்க்காமல் வறியனாக இருக்கிறேனே   என எண்ணினான்..உடனே, தன் நண்பரும்,சிறந்த வேதவித்துவுமான செல்வனம்பி என்பவரை அழைத்து"மறுமைக்கு உண்டானதைச் சேர்த்துத் த்ருபவன் யார்? " என்றான்

செல்வனம்பியும், இதை ஒரு போட்டியாக அறிவித்தார்.சரியான விடை கூறுபவருக்கு, கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள பொற்கிழி பரிசளிக்கப் படும் என அறிவித்தார்

யார் யாரோ வந்து என்னென்னவோ சொல்லியும் மன்னன் மனம் அவற்றை ஏற்கவில்லை.

இந்நிலையில், இறைவன் விஷ்ணுசித்தரின் கனவில் வந்து, "இம்மைக்கும், மறுமைக்கும் உள்ள செல்வம் நான் தான் என உன் திறமையால் நிரூபித்து...பொற்கிழியைப் பெற்று செல்" என்றார்

"என்றைக்கும், ஏழேழு பிறவிக்கும் உள்ள செல்வன் நாராயணனே: என மன்னனுக்கு விளக்கிவிட்டு , பொற்கிழி கட்டியிருக்கும் கம்பத்தின் அருகேச் சென்றார்

கம்பம், அவர் பொற்கிழியை எடுக்கும் விதத்தில் வளைந்து கொடுத்தது.அதைக் கண்டு மன்னனும், மற்றோரும் மகிழ்ந்தனர்

பொற்கிழியை  எடுத்துக் கொண்டு விஷ்ணு சித்தர் கிள்ம்பினார்மன்னன்   தன் பட்டத்து யானையில் அவரை அமர்த்தி மதுரைத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான்

அப்படி விஷ்ணுசித்தர் சொன்னது போல "எம்பெருமான் நாராயணனே பரம்பொருள் என்றேனா? இல்லையே" என்றாள் அப்பெண்

No comments:

Post a Comment