Friday, October 21, 2016

வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே - 45

ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பும் முன் கைகேயி பரதனை தன் தந்தையின் நாடான கேகேயத்திற்கு அனுப்புகிறாள்

பரதன் திரும்பி வந்து,. தன் தாயின் இழி செயலால் மனம் வருந்தி மீண்டும் ராமனை காட்டிலிருந்து அழைத்து வர படையுடன் செல்கிறான்

நடுவழியில் அவனைக் காணும் பாரத்வாஜ முனிவர், "நாட்டை ஆள்வதை விடுத்து படையுடன் எங்கே செல்கிறாய்?" என்றார்

முறையுடன் பெறப்படும் அரசை ஆள்வேனேத் தவிர, சதிச் செயலால் பெறப்படும் அரசு எனக்கு வேண்டாம்" என்கிறான் பரதன்

மறுநாள் சித்திரக் கூடம் செல்லும் பரதனை..காட்டிலும் விடாது ராமனைத் துரத்துவதாக எண்ணிய லட்சுமணன், போர்க்கோலம் பூணுகிறான்

ராமனோ. லட்சுமணனை சமாதானம் செய்கிறான்.பின், பரதன் மூலம் தந்தை மறைந்த செய்தியைக் கேள்விப் பட்டு நிர்க்கடன் செலுத்துகிரான் ராமன்

அடுத்து, பரதனின் தவக்கோலத்திற்கான காரணத்தைக்  .கேட்கிறான்.பரதனோ,   ராமனை மீண்டும் அயோத்திக்கு வந்து நாடாள வேண்டும் என்கிறான்

தந்தையின் வாக்கு பொய்க்கக்கூடாது என ராமன் கூறி பரதனே நாடாள வேண்டும் என்கிறான் ராமன்.

பரதன் பிடிவாதமாக இருக்கிறான்

வேறு வழியில்லாத ராமன் , பரதனை நோக்கி,"இது என் ஆணை.பதினாங்கு ஆண்டுகள் நீ அரசாள்வாய்' என்று கூறியதும், பரதன் மறு பேச்சு பேசாது சம்மதிக்கிறான்

இப்படிப்பட்ட பரதனைப் போல "வைத்த இடத்து இருந்தேனா" என்கிறாள் திருக்கோளூற்ப் பெண்

No comments:

Post a Comment