Friday, October 7, 2016

யான் சத்தியம் என்றேனோகிருஷ்ணனைப் போலே - 16

மகாபாரதத்தில் அளவுக்கு அதிகமாக பொய் பேசும் கதாபாத்திரம் கிருஷ்ணனே  எனச் சொல்வார்கள்.அப்படிப்பட்ட கிருஷ்ணர் ஒருமுறை சத்தியம் செய்கிறார்

அது, "நான் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது உண்மையானால்'  என்று.அந்த சத்தியத்தை எப்படிக் காப்பாற்றுகிறார்?

மகாபாரதப்  போர் முடிந்து, பாண்டவர்களால் கௌரவர்கள்,தன் தந்தை ஆகியோரை இழந்த அசுவத்தாமன், பாண்டவர்களை பழி வாங்க எண்ணுகிறான்.அப்போது, உறக்கத்தில் இருக்கும் உபபாண்டவர்களை, பாண்டவர்கள் என எண்ணி வெட்டிக் கொன்று விடுகிறான்.இதை அறிந்ததும் பாண்டவர்கள் , அசுவத்தாமனனை த் தேடி வியாசரின் குடிலுக்கு வருகின்றனர்

பாண்டவர்கள் வருவதை அறிந்த அசுவத்தாமன், ஒரு புல்லை உருவி அதை பிரம்மாஸ்திரமாக பாண்டவர்கள் மீது ஏவுகிறான்.அர்ச்சுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான்.இதனால் விளைவுகள் மிகவும் மோசமாகும் என்பதால் வியாசபகவான், அதைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்துகிறார்.
அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப்பெறுகிறான்.ஆனால், அசுவத்தாமனுக்கோ, திரும்பப் பெறு மந்திரம் தெரியாது.அந்த அஸ்திரம் உத்தரையின் வயிற்றில் வளரும் ஒரே குலக்கொழுந்தான புரட்சித்துவை பதம் பார்க்கச் செல்ல, கிருஷ்ணர், தனது சுதர்சன சக்கரத்தை உத்தரையின் கருப்பைக்குள் செலுத்தி சிசுவை காப்பாற்றிவிடுகிறார்

இருப்பினம் அந்த சிசு பிறக்கும் போது உயிரில்லாமல் பிறக்கிறது.உத்தரையோ, கிருஷ்ணரே சரணாகதி என அவர் காலில் விழுந்து கதறுகிறாள்.அப்போது, கிருஷ்ணர் 'நான் எப்போதும் சத்தியம் பேசுவது உண்மையானால், இக்குழ்ந்தை உயி ர் பிழைக்கட்டும்" என குழ்ந்தயை தன் கால் கட்டைவிரலால் நீவுகிறார்.குழந்தை உயிர் பெறுகிறது

கிருஷ்ணர் சத்தியம் பேசுவாரா என்பது கேள்விக்குறியானாலும், சத்திய சங்கல்பத்தின் காரணமாகத் தான் எனக் கூறி விடலாம்.ஆனால் அவர் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது எப்படி?

இந்த கேள்வி , நாரதருக்கு எழ, பிரம்மாவிடம் போய்க் கேட்கிறார்.பிரம்மாவோ, உன் சந்தேகத்தை நித்திய உபவாசி துர்வாசர் தீர்த்து வைப்பார் எங்கிறார்.

நாரதருக்கோ மீண்டும் சந்தேகம்.ஒருவேளை பசியைக் கூட பொறுக்க முடியாத துர்வாசர் எப்படி "நித்திய உபவாசி" என.

அந்த சந்தேகத்தை கிரிஷ்ணர் தீர்த்து வைப்பார் என் கிறார் பிரம்மா

நாரதர், துர்வாசரிடம் சென்று கேட்டார்.துர்வாசர் சொன்னார்.." ராம அவதாரத்தின் போது ஒருமுறை ராமர் காட்டினுள் செல்கையில், அங்கு இருந்த ரிஷிகள் எல்லாம், ராமனின் தோள்களின் அழகைப் பார்த்து விட்டு,, ஆஹா..இந்தத் தோள்களை நாம் ஒருமுறையாவது பற்ற மாட்டோமா? என்று.அடுத்து, கிருஷ்ண அவதாரத்தில், அந்த ரிஷிகள் எல்லாம் கோபிகைகளாக அவதரித்தனர்.இதுவே, பதினாயிரம் மனைவியர் என்பது.ஆண்டவன் ஒருவனே சரணாகதன் மற்றவர்கள் சரணம் அனுஷ்டிப்பவர்கள்.அவ்வளவுதான்"

நாரதர் அடுத்த சந்தேகத்தை கிருஷ்ணரிடம் வந்து கேட்டார்.

உடன் கிருஷ்ணர், "நாரதா! சற்று நேரம் பொறு.துர்வாசர் இன்று சற்று அதிகம் உண்டுவிட்டார்.அதனால் எனக்கு வயிற்று வலி.ருக்மணியிடம், சற்று சுக்கும், வெல்லமமும் வாங்கி சாப்பிட்டுவிட்டு வருகிறேன்' என்று உள்ளே சென்றார்.

நாரதருக்கோ, துர்வாசர் அதிகம் உண்டால் கிருஷ்ணருக்கு வயிற்றுவலி எப்படி வரும்? என

அதற்கு கிருஷ்ணர், "துர்வாசர் தான் உணவு உண்பதற்குமுன்  சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து எனச் சொல்லி உண்கிறார்.ஆ கவே, அவர் உண்ணூம் உணவு  என்னை வந்தடையும்.அவரோ நித்திய உபவாசியாகிறார்" என்றார்

அப்படிப்பட்ட கிருஷ்ணர் போல "யான் சத்தியம்" என்றேனா...இல்லையே.. என் கிறாள் திருக்கோளூர் பெண்

No comments:

Post a Comment