Tuesday, October 25, 2016

காட்டுக்குப் போனேனோ பெருமானைப் போலே - 53

ராமனுக்குப் பட்டாபிஷேகம்

மன்னன் தசரதன் அறிவித்து விட்டான்

சொல்ல வந்த மந்தரைக்கு பொன்மாலையை பரிசளித்தாள் கைகேயி..

"இது மகிழும் தரணமா? அவன் அரசனானால் உன் மகன் பரதன் என்னாவான்.ஆகவே ராமனை காட்டுக்கு அனுப்பு.உன் மகனை அரசனாக்கு: மந்தரை போதித்தாள்.மனம் மாறினாள் கைகேயி

மன்னன் தசரதன் முன்னர் ஒருசமயம் தன் உயிரைக் காத்த கைகேயிக்கு இரு வரங்களை அளித்திருந்தார்.அதை உபயோகித்துக் கொள்ள தீர்மானித்தாள்

"ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும்.பரதன் அரசாள வேண்டும்" மன்னனிடம் கேட்டாள்.பிடிவாதமாக இருந்தாள்.கொடுத்த வாக்கைக் காக்க மனனுக்கும் வேறு வழியில்லை.

ராமன் , லட்சுமணன், பிராட்டியுடன் வனத்திற்குக் கிளம்புகிறான்.தந்தையிடம் விடை பெறச் செல்கிறான்.

"ராமா! நான் கொடுத்த வரத்திற்கு கட்டுப் பட்டுவிட்டேன்.நீ என்னை மதியாமல் அயோத்தியைக் கைப் பற்றியிருக்கலாமே" என் கிறான் மன்னன்

"தந்தையே! நான் ராஜ்ஜியத்திற்கு ஆசைப்படவில்லை.உங்கள் வாக்கைக் காப்பாற்றுவேன்.பதினான்குஆண்டுகள் வனவாசம் புரிந்து திரும்புவேன்' என்றான்

தன் தந்தையின் வாக்கைக் காக்கக் காட்டிற்கு சென்றேனோ பெருமானைப் போல நான் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment