Thursday, October 13, 2016

இளைப்புவிடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே - 33

ஸ்ரீநாராயணர் முன்னிலையில் சாதி பேதம் கூடாது என உரைத்தது வைஷ்ணவம்.ஸ்ரீராமாநுஜர் அதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.

இனி நம்பாடுவான் கதை

108 திவ்விய தேசங்களில் திருக்குறுங்குடியும் ஒன்று.மகேந்திர மலை என்ற மலையை அடுத்து அமைந்துள்ள இவ்விடத்தில் எம்பெருமான், நின்ற நம்பி,இருந்த நம்பி,கிடந்த நம்பி,திருப்பாற்கடல் நம்பி,மலைமேல் நம்பி என ஐந்து விதமாக எழுந்தருளியுள்ளார்.வராக அவதாரம் எடுத்த பெருமாள் தன் உடலைக் குறுக்கிக் கொண்டதால் இத்தலத்திற்கு இப்பெயர்


நம்பாடுவான் ஒரு வைணவ பக்தர்.பாணர் குலத்தில் பிறந்தவர்.தன்னுடைய குலத்தின் காரணமாக கோயிலின் வாயிலில் நின்று பாடிவிட்டு செல்வது அவரது வழக்கம்.அவரது பண்ணில் மயங்கி பெருமாளே அவரை நம்பாடுவான் என அழைக்க, அதுவே நிரந்தரமானது

ஒருநாள் அவர் பண்ணிசைக்க சந்நிதி வாசல் செல்கையில், ஒரு ராட்சசன் தடுத்து;'உன்னை உணவாக உண்ணப் போகிறேன்" என்றது

"இன்று ஏகாதசி.எம்பெருமானின் முன் பாடிவிட்டு , என் ஏகாதசி விரதத்தையும் முடித்துவிட்டு வருகிறேன்.அதுவரை பொறுத்திரு" என்றார்

ராட்சசனும் அவர் சொன்ன வாக்குறுதியை நம்பி அவரை அனுப்பியது

சந்நிதி அடைந்து, வழக்கம் போல, சந்நிதியிலிருந்து விலகிப் பாடினார் நம்பாடுவான்,

ஆனால், எம்பெருமான், கொடி மரம், கருடன் ஆகியவற்றை விலகி இருக்கச் சொல்லி அங்கிருந்த வண்ணமே சேவை சாதித்தார்

பின்னர், கொடுத்த வாக்கைக் காக்க ராட்சசனிடம் சென்றார்.வழியில் ஒரு முதியவர், "நீ போகாதே! தன் உயிரைக் காத்துக் கொள்ள வாக்குத் தவறினால் தவறில்லை" என்றார்

ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பதுதான் ஸ்ரீவைஷ்ணவின் த்ருமம்" என் நம்பாடுவான்  மறுத்துவிட்டார்

திரும்பி வாக்குத் தவறாது வந்தவரைப் பார்த்த ராட்சசன். நான் உன்னை உண்ணாதிருக்க ஒரு நிபந்தனை.நீ பாடிய பாடல்களின் பலனை எனக்கு அளித்திடு" என்றான்

ஆனால் நம்பாடுவான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனாலும் ராட்சசன் சொன்னான் "நான் முற்பிறவியில் ஒரு அந்தணன்.எனக்கு சாபவொமோசனம் வேண்டுமாயின்..நீ எம்பெருமான் முன் பாடிய கைசிக பண்ணின் பலனையாவது எனக்குக் கொடு" என்றான்

"சரி" என இசைந்தார் நம்பாடுவான்.இன்றும் கைசிக ஏகாதசி (கார்த்திகை மாதம்) அக்கோயில் விழா கொண்டாடுகிறது

அறநெறி பிறழாது நம்பாடுவான், ராட்சசன் இளைப்பின் தாகத்தை தீர்த்ததால்."இளைப்புவிடாய் தீர்த்தேனொ நம்பாடுவான் போலே" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment