Sunday, October 2, 2016

பிணமெழுப்பிவிட்டேனோ தொண்டைமானைப் போலே - 5

கிருஷ்ண சர்மா என்னும் அந்தணன் ஒருவன், தன் மனைவியையும், மகனையும் மன்னன் தொண்டைமானின் காவலில் விட்டு விட்டு காசியாத்திரைக்குச் சென்றான்.

அவன் திரும்பி வரம் நேரத்தில், அவர்கள் இறந்துவிட்டனர்.

மன்னனுக்கு, அந்தணன் வந்ததும் இதை எப்படிக் கூறுவது எனத் தெரியவில்லை.ஆதலால் அவனிடம், அவர்கள் இருவரும் அரசவை தோழிகளுடன் திருமலை யாத்திரை சென்றுள்ளனர் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் திரும்பி விடுவர் என்றும் கூறினான்

பின் மன்னன், ஸ்ரீனிவாசபெருமாளை நோக்கிக் க த றி அழுது,அவர்களை பிழைக்க வைக்க வேண்டினான்

ஸ்ரீனிவாச பெருமாளும், மன்னனை, வடவேங்கட மாமலைக்கு அவர்கள் பிணத்தைக் கொணருமாறு உத்தரவிட்டான்.

மன்னன் தொண்டைமானும் அவ்வாறே செய்ய, அங்கு இருவரும் உயிர் பிழைத்தனர்

திருக்கோளூர் பெண்ணும் 'தனக்குத்  தொண்டைமானைப் போல பக்தியில்லையே" என்பதையே...

"பிணமெழுப்பி விட்டேனோ தொணடைமானைப் போலே" என்றாள்

No comments:

Post a Comment