Sunday, October 30, 2016

62- அத்வைதம் வென்றேனோ எம்பெருமானைப் போலே

அத்வைதம் என்பது இரண்டற்ற நிலை

ஜீவனும், இறைவனும் (ஜீவாத்மா, பரமாத்மா) ஒன்று தான்..வேறு அல்ல..சகுல உயிர்களுக்கும் பொதுவாக ஆத்மா விளங்குகிறது

நான் தான் பிரம்மம் என்ற அத்வைத  தத்துவம் ராமானுஜருக்கு திகைப்பூட்டியது

நானே பிரம்மம் என்று இருந்து விட்டால் கடவுள் வணக்கத்திற்கு வகை ஏது...பக்திக்கு இடம் ஏது.தன்னைவிட மேலான பரம்பொருள் என ஜீவன் உணர்ந்தால்தான் அந்த பரம் பொருளை வணங்க வேண்டும்..முக்தியடைய வேண்டும் என்ற எண்ணம் ஜீவனுக்கு ஏற்படும்.

பிரம்மம் தான் எல்லாம்..அதனால் ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்ர தன் கொள்கையை பரப்பி வந்தார்

அப்போது வடநாட்டில் யக்ஞமூர்த்தி என்ற பெரும்புலவர் இருந்தார். அவர் அத்வைத நெறியை வலியுறுத்தி வந்தார். ராமானுஜருடன் வாதாட யக்ஞமூர்த்தி திருவரங்கத்திற்கு வந்தார். யக்ஞமூர்த்தி நிரம்பக் கற்ற துறவி. வாதத்திறமை மிக்கவர்.

வாதப்போரின் நிபந்தனைப்படி, யக்ஞமூர்த்தி, தான் தோல்வி அடைந்தால் தன் பெயரை மாற்றி, ராமானுஜரின் பெயரை வைத்துக் கொள்வதாகக் கூறினார். அத்துடன், ‘‘நான் ராமானுஜரின் பாதுகைகளைச் சுமப்பேன்’’ என்றும் கூறினார். ராமானுஜர், ‘‘நான் தோற்றால் எனது நூல்களைக் கையால் தொடமாட்டேன்’’ என்றார். வாதம் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பதினேழாம் நாள் நிலவரப்படி யக்ஞமூர்த்தியின் பக்கம் ஓங்கி நின்றது.

  அன்றிரவு ராமானுஜர் திருவமுது செய்யாமல் இருந்தார். ஆழ்வார்கள் வளர்த்த திருமால் நெறி தன்னால் தோல்வி அடையாமல் காத்திடப் பெருமாளிடம் வேண்டினார். பெருமாளும் ராமானுஜரின் கனவில் தோன்றினார். உமக்கு, ‘‘இன்னுமொரு சீடனைத் தந்தருள்வோம்!’’ என்று குறிப்பாகக் கூறியருளினார். பதினேழாம் நாளிலேயே யக்ஞமூர்த்தி தன்னுடைய வாதத்தை நிறைவு செய்து விட்டார். பதினெட்டாம் நாள், ராமானுஜர் பல்வேறு சான்றுகளுடன் வாதாடினார். இறுதியில் வெற்றி வாகையும் சூடினார்.


அந்த எம்பெருமானைப் போல வாதாடி அத்வைதம் வென்றவளா நான்? என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment