Sunday, October 2, 2016

பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே - 6

கண்டாகர்ணன் , இறைவனுக்கு நிவேதனமாக நரமாமிசமே படைத்து  வந்தான்

அவன் முதலில் சிவ பக்தனாய் இருந்தான்.அப்போது மற்ற தெய்வங்களின் பெயரைக் கேட்பதையே வெறுத்தான்.அதனால் காதுகளில் மணியைக் கட்டி வைத்திருந்தான்.யாரேனும், பிற தெய்வப்பெயரைக் கூறினால், உடன் தலையை ஆட்டி மணிகளை  ஒலிக்கச் செய்து, அது தன் காதில் விழாதபடி பார்த்துக் கொண்டான்

ஒரு சமயம் அவன் சிவனிடம், தனக்கு முக்தியளிக்குமாறு வேண்டினான்.

ஈசனும், "கண்டாகர்ணா! நீ திருமாலை வழிபட்டு முக்தியடையலாம்" என்றார்

கண்டாகர்ணன், தன் காதுகளில் கட்டியிருந்த மணிகளை   அகற்றினான்.பின், குபேரனிடம் சென்று, தனக்கு வழி காட்டுமாறு வேண்டினான்.குபேரன் அவருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து, "கண்டாகர்ணா! இனி நீ சைவத்திற்கு மாற வேண்டும் "என்றார்

"அது என்னால் இயலாதே" - கண்டாகர்ணன்

"அப்படியாயின், வயது முதிர்ந்த இறந்த விலங்குகளை உண்ணலாம்"- குபேரன்

 பின், குபேரன் ,கண்டாகர்ணன்  , கிருஷ்ண அவதாரக் காலத்தில் வாழ்ந்ததால், துவாரகைக்கு செல்ல பணித்தார்

துவாரகை செல்லும் வழியில், உணவேதும் கிடைக்காது கண்டாகர்ணன் வருந்தினான்.பசி அதிகமானது.வேறுவழியின்றி, தன்னருகேக் கிடந்த மனிதப் பிணத்தை சமைத்து பக்குவப் படுத்தினான்

பின், அதை நாராயணனுக்கு நிவாதனம் செய்தான்

கண்டாகர்ணனுக்கும், அவன் தம்பி நந்திகனுக்கும் கண்ணன் முக்தியளித்தார்.

இதையே, "பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே என் கிறாள் அப்பெண்.

No comments:

Post a Comment