Friday, October 7, 2016

அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே - 17

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்துக் காட்டிய அவதாரம் ஸ்ரீராம அவதாரம்
பல நல்ல நெறிகளை தன் வாழ்வின் மூலம் உபதேசித்தவர்

பகவானின் அம்சமான ராமர், நினைத்திருந்தால், ஒரே நாளில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டிருக்க முடியும்.அப்படி செய்யாது, காடு.மலை,செடி கொடிகளிடம் எல்லாம் "சீதையைக் கண்டீர்களா?"என புலம்பியிருக்க வேண்டாம்.

சீதையைத் தேடி ராமலட்சுமணர்கள் வந்த போது ஜடாயூவைப் பார்த்தனர்.ஜடாயூ ராவணனால் வீழ்த்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.இவர்களுக்காகவே காத்திருந்தாற் போல , சீதையை, ராவணன் தூக்கிச்சென்ற வழியையைக் காட்டிவிட்டு உயிரை இழந்தது.அதற்கான ஈமச்சடங்குகளை ராமர் செய்தார்

பின்னர், ஜடாயூ சொன்ன வழியே சென்ற போது, கபந்தன் என்ற அரக்கனைப் பார்த்தனர்.அவனுக்குத் தலையில்லை,பானை போன்ற வயிறு.குகை போன்ற வாய்,கண்.பனைமரம் போன்ற  பருத்த தோள்கள்

அந்தத் தோள்களால் ராமலட்சுமணனை வாயில் போட்டுக் கொள்ள முற்பட, அவர்கள் அதன் தோள்களை வெட்டினர்.பின், அந்த அரக்கனைக் கொன்றனர்.பின், அரக்கனின் வேண்டுகோளுக்கு இணங்க, அவனைத் தகனம் செய்த போது .சிதையில் இருந்து அழகிய உருவம் கொண்ட ஒருவன் வெளிப்பட்டான்.அவன் ஒரு கந்தர்வன் என்ன்றும், ஒரு முனிவரின் சாபத்தால் அரக்கன் ஆனதாகவும் கூறினான்

பின்னர், அவன் ராம லட்சுமணரிடம்,"மேற்குமுகமாய்ச் சென்றால் ரிஷ்யமுகம் என்னும் மலையும் அதன் அருகே பம்பை நதியும் இருக்கும்.அவ்விடத்தில் சூர்ய அம்சமான சுக்ரீவன் என்ற வானரத்தலைவன், தன்  மனைவி, ராஜ்ஜியம் ஆகியவற்றை வலிமைமிக்க அவன் சகோதரன் வாலியிடம் இழந்து சுற்றிக் கொண்டிருக்கிறான்.அவனை நண்பனாகக்   கொண்டு ராவணனிடம் இருந்து சீதையை மீட்கலாம்" எனக் கூறினான்

அந்தக் கபந்தனைப் போல ஸ்ரீராமனுக்கு வழிகாட்டவில்லையே நான் என் கிறாள்  திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment