Tuesday, October 18, 2016

அனுப்பிவையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே - 39

தசரதருக்கு புத்திரப் பாசம் அதிகம்.

ஆகவேதான் அரக்கர்களை வதம் செய்ய ஸ்ரீராமரை அனுப்ப மறுக்கிறார்

விசுவாமித்திரரும் கோபம் கொள்கிறார்

இந்நேரத்தில் வசிஷ்டருக்கு நடக்கப் போகும் சம்பவங்கள் ஞானதிருஷ்டியால் தெரிந்தது

ஸ்ரீராமருக்கும், சீதா பிராட்டியாருக்கும் திருமணம் நடக்க வேண்டியது கட்டாயமல்லவா?ஆகவே அவர் தசரதரைப் பார்த்து, "மன்னா!  உமது புதல்வனுக்கு நல்லது ஒன்று நடந்தால் அதை நீ த்டுப்பாயா?" என்கிறார்.

அத்துடன் இல்லாது, "வெள்ளம் பெருகு, நாடு நலம் பெறுவது போல, உன் புதல்வர்களால் நிறைய நல்ல செயல்கள் நடக்கப் போகின்றன.அதனை தடுத்து விடாதீர்.உமது புதல்வனை அவருடன் அனுப்புக" என்றார்

தசரதரும் மனம் மாறி, தன் புதல்வர்கள் ஸ்ரீராமனையும், லட்சுமணனையும் விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தார்

அன்று வசிஷ்டர் சொன்னது போல "அனுப்பிவையும் " என்று சொல்லவில்லையே நான் என்கிறாள் அப்பெண்.

No comments:

Post a Comment