Saturday, October 8, 2016

அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே - 20


ராமாயணகாலம் ரிஷிகளீன் காலம் எனலாம்

த்ரேதா யுகத்தில் எத்தனை ரிஷிகள் இருந்துள்ளனர்

விசுவாமித்திரர், வசிஷ்டர்,அத்திரி,கௌதமர்,அகத்தியர்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

விசுவாமித்திரர் தசரதரிடம் ஒரு உதவி கேட்டு வந்தார்

அவரது சித்தாஸ்ரமத்தில் நடைபெறவுள்ள யாகத்துக்கு ஆறுநாட்கள் காவலாக ராமனை அனுப்புமாறு கேட்டார்

இதைக் கேட்ட தசரதருக்கு..அவர் தன் உயிரையேக் கேட்பது போல இருந்ததாம்

அப்போது விஸ்வாமித்திரர் சொன்னார்

"அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸ்த்யராக்ரமம் வஷிஷ்டோபி
மஹாதேஜா யே சேமே தபஸிஸ்திதா"

(நான் ராமனை மஹாத்மா என உண்மையில் அறிகிறேன்.மஹாதேஜஸ்வியான விஷிஷ்டரும் கூட இதை அறிவார்.அனைவரும் இதை அறிவார்கள்)

அப்படி விஸ்வாமித்திரர் "அஹம்வேத்மி: என்று சொன்னது போல நான் சொல்லவில்லையே (பின் நான் ஏன் இங்கிருக்க வேண்டும்) என் கிறாள் அப்பெண்

No comments:

Post a Comment