Saturday, October 15, 2016

இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே - 35

ஊர்மக்கள் புரம் பேசுவதைக் கேட்டு ஸ்ரீராமன் . லட்சுமணனிடம், சீதாப்பிராட்டியைக் காட்டில் கொண்டு சென்று விடப் பணித்தார்.

லட்சுமணனும், தேரில் தேரில் பிராட்டியை ஏற்றிக்கொண்டு, காட்டின் மையப் பகுதிக்கு வந்தான்.

சீதையை இறக்கிவிட்டு விட்டு தலை குனிந்து நின்றான்.

"பெண்களுக்கு கணவந்தான் தெய்வம்.அவர் கட்டளைக்கு அடி பணிகிறேன்.ஸ்ரீராமனின், கர்ப்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்''என்பதையும் அவரிடம் சொல்" என்கிறாள் பிராட்டி

வால்மீகி முனிவர் சீதைக்கு அடக்கலம் கொடுத்தார்.சீதையும் அவரது ஆசிரமத்தில் அழகான இரு குழந்தைகளைப் பெற்றாள்

அக்குழந்தைகளை கையில் வாங்கிக் கொண்டார் வால்மீகி.தன் தர்ப்பைப்புல்லின் மேல் பாகமான குசம் என்று ஒரு குழ்ந்தைக்கும், கீழ் பாகமான இலவம் என ஒரு குழந்தைக்கும் பெயரிட்டார்.

இராமகாதையை அவர்களுக்குச் சொல்லி ஊரெல்லாம் அதை பாட வைத்தார்.

ஸ்ரீராமன் அசுவமேத யாகம் செய்தார்.பரதன் ஒருநாள் இரு சிறுவர்களையும் அவரிடம் அழைத்து வந்தான்.அவர்கள் பாடிய இராமகாதையை ஸ்ரீராமனேக் கேட்டார்.

இதற்குக் காரணமானவர் வால்மீகி.இரு குழ்ந்தைகளை வளர்க்கும் பேறினைப் பெற்றவர்.அப்படிப்பட்ட பேறு எனக்குக் கிடைக்கவில்லையே

"இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்  

No comments:

Post a Comment