Sunday, October 16, 2016

இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார்ப் போலே - 36

தன் பெயர், குலம், கற்ற வேதம், அரங்கன் ஆகிய அனைத்தையும் மறந்து தாசியின் வீடே கதியாகிக் கிடந்தார் தொண்டரடிப் பொடியார்

கண்ணன் கம்சனைக் காண வந்த போது மாலாக்காரர் (மாலை வியாபாரம் செய்பவர்) ஒருவர் கண்ணனுக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தாராம்.அவரது உண்மை அன்பை ஏற்ற கண்னன் அவருக்கு முக்தியளித்தாராம்

அதேபோன்று அரங்கன் கோயில் அருகில் நந்தவனம் அமைத்து, தினமும் துளசிமாலையக் கட்டி அரங்கனுக்குச்  சூடி அழகுப்பார்த்தவர் விப்ரனாராயணன் எனும் அந்தணர் (இவரே தொண்டரடிப்பொடியார்)

அபப்டிப்பட்டவர் புலனடக்கம் இழந்து தாசிவீடே எனக் கிடந்தார்.அனைத்துப் பொருளையும் இழந்தார்.

"காசிருந்தால் வா...இல்லையேல் வெளியே போ" என தாசி தேவதேவி அவரை வெளியில் துரத்தி கதவை அடைத்தாள்

அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது."பணமிருந்தால் வா...என்று சொன்னேனே!" எங்க் கதவைத் திறந்தவள், வாயிலில் நிற்பவரைப் பார்த்து, "யார் நீ?" என்றாள்

"நான் விப்ரநாராயணனுக்கு வேண்டற்பட்டவன்.அவரிடம் காசில்லை.ஆதலால் எனக்குச் சொந்தமான பொன்வட்டியைக் கொடுக்கிறேன்.அவனை அனுமதி" என்றார்

தெவதேவி பொன்வட்டியை வாங்கிக்கொண்டாள்.விப்ரநாராயணனுக்கு கதவுத் திறந்தது

மறுநாள் கோயில் திறக்கப்பட்டது.பெருமாலின் வட்டியைக் காணவில்லை.கோயிலில் இருந்த கடைநிலை ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவனை அடித்துச் சிறையில் அடைத்தனர்
 அந்த கடைநிலை ஊழியரின் காதலி தேவதேவியின் சேடிப் பெண்.அவல் வந்து, விப்ரநாராயணனின் நண்பர் ஒருவர் பொன்வட்டியைக் கொடுத்ததைக் கூறினாள்.

விப்ரநாராயணன்  சிறையெடுக்கப்பட்டார்.

தன் தவறை உணர்ந்த தொடரடிப்பொடியாழ்வார்..தன் குலப்பெருமையை இழந்து, நாயினும் கீழானேனே என வருந்தினார்.திருமாலை என்ற 45 பாசுரங்கள் பாடினார்

மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி வட்டியைக் கொடுத்தது தானே என்று சொல்லி விப்ரநாராயணரை அகம், புறம் இருச் சிறைகளிலிருந்தும் விடிவித்தார்

ஒருமாலை அவர் அவர் அரங்கனுக்குக் கட்டும் துளசிமாலை
இரண்டாவது மாலை அவர் மீது பாடப்பட்ட 45 பாசுரங்கள் அடங்கிய திருமாலை

அப்படி இருமாலைகளை நான் எம்பெருமானுக்கு ஈந்தேனா தொண்டரடியார்ப் போல ..(இல்லையே .) என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

No comments:

Post a Comment