Thursday, October 13, 2016

கொன்டு திரிந்தேனோ திருவடியைப் போலே - 32

வைஷ்ணவத்தில் இரு திருவடிகள்

பெரிய திருவடிகள் - கருடாழ்வார்.
இரண்டாவது திருவடி - ஹனுமான்

கருடன் தன் தாயான வினதையின் அடிமைத்தனத்தை நீக்கும் பொருட்டு அமிர்தகலசத்தை  தேவர்களிடம் இருந்து கவர்ந்து  வரச் சென்று தேவர்களுடன் போரிட்டு இறுதியில் மகாவிஷ்ணுவின் ஆணைப்படி பணிந்து அவர்க்கு வாகனமாகிறார்

பெரியாழ்வார் கூடல் மாநகர் மன்னன் சந்தேகத்தைத்  தீர்த்து, பொற்கிழியைப் பெற்றுக் கொண்டு யானை மீதேறி மதுரை வீதிகளில் , , யானை மீதேறி பவனி வரும் போது, எம்பெருமான் தேவி சகிதம் கருட வாகனத்தில் காட்சியளித்தார்

ஆழ்வார்திருநகரியில் கருடனுக்கென தனி உற்சவமே உண்டு.இங்குக் கோவில் வெளிச்சுவரில் அமர்ந்திருக்கும் கருடன் விஷேசமானவன்

இந்த கருடனுக்கு அருள்பட்சிராஜர் என்ற பெயரும் உண்டு.ஒருமுறை இஸ்லாமியர்கள் படையெடுப்பின் காரணமாக திருவுருவச் சிலைகளுக்கு, பாதுகாப்பின்மை ஏற்பட , நம்மாழ்வாரின் காய்ச்சிய திருமேனியை எடுத்துக் கொண்டு கோழிக்கோட்டில் மறைத்து வைத்தனர்

மீண்டும் அமைதித் திரும்பியதும், ஒளித்து வைத்த சிலையைத் தெடிச் செல்கையில். ஒளித்த இடம் மறந்து விடுகிறது.அப்போது கருடன் பறந்து வந்து.இடத்தை அடையாளம் சொன்னது,நம்மாழ்வார் சிலை மீண்டும் சந்நிதியில் எழுந்தருளச் செய்தனர்

கருடாழ்வார் போல எம்பெருமானை சுமந்து செல்லும் பாக்கியம் தனக்கு இல்லையே என்பதையே, திருக்கோளூர்ப் பெண் :கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே என சொல்கிறாள்

No comments:

Post a Comment