Sunday, October 9, 2016

தேவுமற்றறியேனோ மதுரகவியாரைப் போலே - 21

மதுரகவியாழ்வார் பிறந்த மண் திருக்கோளூர்

இவரது ஊருக்கு அருகாமையில் உள்ள திருக்குருகூரில் உள்ள நம்மாழ்வாரின் திண்மையை மதுரகவியார், அயோத்தி செல்கையில் அறிந்தார்.வானத்தில்  ஒளியைப் பார்த்து திருக்குருகூர்   வந்து அங்கு  நம்மாழ்வார் பதினாறு வருடங்களாக ஒரு புளிய மரத்தடியில்  அசைவின்றி இருப்பதை காண்கிறார்

இதை முன்னரே சொல்லியுள்ளோம்

வைணவத்தில் பகவத் சம்பந்தம் கிடைக்கிறதோ இல்லையோ ஆச்சார்ய சம்பந்தம் இருந்தால் போதும்.பகவத் சம்பந்தம் தானே வந்து சேரும்.ஆனால், ஆச்சார்ய சம்பந்தம் இல்லாமல் நேரடியாக பெருமாள் சம்பந்தம் எளிதானது அல்ல.வைணவத்தின் சூட்சமே அதில்தான் அடங்கியுள்ளது

மதுரகவியாழ்வார் அதற்கு ஒரு உதாரணம்

நம்மாழ்வாரின் மறைவிற்கு பின்னர், அவரது தங்கத்தினால் ஆன திருமேனியை ஊர் ஊராக எடுத்துச் சென்று அவர் புகழ் பாடி வந்தார்

நம்மாழ்வாரின் பாடல்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்திற்கு பாடல்கள் எழுதப்பட்ட ஓலைகளை எடுத்துச் செல்கிறார்

"கண்ணன் கழவினை நண்ணும் மணமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாராணமே'

என்ற இருவரிப் பாடலை சங்கப்பலகை ஏற்றுக் கொண்டது.

ஆச்சாரியனைத் தவிர வேறு கடவுளை தான் அறிந்ததில்லை என்று தலையில் வைத்து கொண்டாடும் நதுரகவியாழ்வாரைப் போல தான் கொண்டாடவில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

No comments:

Post a Comment